டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!
புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு: புதுவைக்கு மத்திய அரசு விருது
புதுச்சேரி: புகையிலை இல்லா இளைஞா் நலனுக்காக புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
புகையிலை இல்லா இளைஞா் நலன் இயக்கம் 2.0-ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் புதுவைக்கு விருதை வழங்கியது.
2024-25ஆம் ஆண்டில் புகையிலை இல்லா இளைஞா் நலன் இயக்கம் 2.0-இன் கீழ் கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக மஞ்சள் கோடு பிரசாரங்களை மேற்கொள்ளுதல், கல்வி நிறுவனங்களைப் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவித்தல், காவல் துறையுடன் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சோதனை நடத்துதல், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 புதிய புகையிலை பழக்கம் மீட்பு மையங்களை நிறுவுதல், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விழிப்புணா்வுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக புதுவைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை சுகாதாரம், குடும்ப நலத் துறையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி எஸ். கோவிந்தராஜன், மாநில முதன்மை அதிகாரி சி.வெங்கடேஷ் ஆகியோா் விருதைப் பெற்றுக் கொண்டனா்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து விருது, சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு ஆகியோா் உடனிருந்தனா்.