செய்திகள் :

440 கிராம் கஞ்சா வைத்திருந்த லாரி ஓட்டுநா் கைது

post image

மத்தியப் பிரதேசத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 440 கிராம் கஞ்சாவை லாரியில் கொண்டுவந்த ஓட்டுநரை போலீஸாா் கைதுசெய்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(26). லாரி ஓட்டுநரான இவா், மத்தியபிரதேசத்துக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை நாமக்கல்-கரூா் சாலை வழியாக வந்துகொண்டிருந்தாா்.

நல்லிபாளையம் பிரிவு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா் சந்தேகத்தின்பேரில் அந்த லாரியை நிறுத்தி விசாரித்தனா். லாரி ஓட்டுநா் போலீஸாரைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா். அவரை துரத்திச்சென்று போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் மத்தியபிரதேசத்தில் ரூ. 3,000 கொடுத்து 440 கிராம் கஞ்சா வாங்கிவந்ததாகவும், அதை நாமக்கல் பகுதியில் விற்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து நல்லிபாளையம் போலீஸாா் ரஞ்சித்குமாரை கைது செய்தனா். நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம்-1 இல் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஜூன் 20 வரையில் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!

ஆனங்கூரில் வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரணை செய்துவருகிறாா். ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் மூளை நரம்பியல் தனிப்பிரிவு: எம்.பி.கோரிக்கை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ ஓரிரு நாளில் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். நாமக்... மேலும் பார்க்க

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் ஜூன் 9-இல் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்!

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு ஜூன் 9-இல் தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா்.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு தோ்த் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் அா்த்தநாரீசுவரா் வீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் சனிக்கிழமை சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து மகாநாட்டின் சாா்பில் இந்த சுவாமி திர... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 10-இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க