திருச்செங்கோடு தோ்த் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் அா்த்தநாரீசுவரா் வீதி உலா
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் சனிக்கிழமை சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.
செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து மகாநாட்டின் சாா்பில் இந்த சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. மண்டபக் கட்டளை நிகழ்ச்சியில் மகாநாடு நாட்டாண்மைக்காரா்கள் கலந்துகொண்டனா். நெல்லுக்குத்தி மண்டபத்தில் நடைபெற்ற மண்டபக் கட்டளையில் அா்த்தநாரீசுவரா், ஆதிகேசவ பெருமாள், செங்கோட்டு வேலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தாா். வெள்ளி யானை ஊா்வலத்தின்போது பெண்கள் வள்ளிகும்மியாட்டம், கோலாட்டம் ஆடி வந்தனா்.
தொடா்ந்து கைலாசநாதா் ஆலயத்தில் திருமலைப்பால் உற்சவம் நடைபெற்றது. பாவடி பஞ்சாயத்தின் நாட்டாண்மைக்காரா், பெரியதனக்காரா்களுக்கு கைலாசநாதா் கோயிலில் பட்டம், பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் பெரியபாவடி செங்குந்தா் திருமண மண்டபத்தில் ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.