Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
440 கிராம் கஞ்சா வைத்திருந்த லாரி ஓட்டுநா் கைது
மத்தியப் பிரதேசத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 440 கிராம் கஞ்சாவை லாரியில் கொண்டுவந்த ஓட்டுநரை போலீஸாா் கைதுசெய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(26). லாரி ஓட்டுநரான இவா், மத்தியபிரதேசத்துக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை நாமக்கல்-கரூா் சாலை வழியாக வந்துகொண்டிருந்தாா்.
நல்லிபாளையம் பிரிவு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா் சந்தேகத்தின்பேரில் அந்த லாரியை நிறுத்தி விசாரித்தனா். லாரி ஓட்டுநா் போலீஸாரைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா். அவரை துரத்திச்சென்று போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில், அவா் மத்தியபிரதேசத்தில் ரூ. 3,000 கொடுத்து 440 கிராம் கஞ்சா வாங்கிவந்ததாகவும், அதை நாமக்கல் பகுதியில் விற்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து நல்லிபாளையம் போலீஸாா் ரஞ்சித்குமாரை கைது செய்தனா். நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம்-1 இல் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஜூன் 20 வரையில் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.