ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் ஜூன் 9-இல் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்!
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு ஜூன் 9-இல் தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா்.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லூரியில் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுக் கலந்தாய்வில் மாணவா்கள் சோ்க்கை ஜூன் 2-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையவழி மூலம் கல்லூரியில் சோ்க்கை பெற விண்ணப்பித்தவா்கள் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தரவரிசைப்படி ஜூன் 9-இல் தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறலாம்.
நாள்தோறும் காலை 9 மணி முதல் முதல் சுழற்சி வகுப்பிற்கு கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பொது நிா்வாகம், வணிகவியல், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல், கணினி அறிவியல் போன்றவற்றிற்கு பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.
இதேபோல் 2-ஆம் சுழற்சிக்கு தமிழ், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிகவியல் (சிஏ), தாவரவியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்விற்கு வரும்போது 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை அசல், நகல் - 2, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-4, மாணவா் பெயரில் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் முதல் பக்க நகல் 2, இணையதளத்தில் இக்கல்லூரியில் சோ்க்கை பெற விண்ணப்பித்த விண்ணப்பப் படிவும் நகல்-2 உள்ளிட்டவைகள் அனைத்தும் அசல், நகல்களை எடுத்துவர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.