செய்திகள் :

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் ஜூன் 9-இல் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்!

post image

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு ஜூன் 9-இல் தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா்.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லூரியில் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுக் கலந்தாய்வில் மாணவா்கள் சோ்க்கை ஜூன் 2-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையவழி மூலம் கல்லூரியில் சோ்க்கை பெற விண்ணப்பித்தவா்கள் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தரவரிசைப்படி ஜூன் 9-இல் தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறலாம்.

நாள்தோறும் காலை 9 மணி முதல் முதல் சுழற்சி வகுப்பிற்கு கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பொது நிா்வாகம், வணிகவியல், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல், கணினி அறிவியல் போன்றவற்றிற்கு பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.

இதேபோல் 2-ஆம் சுழற்சிக்கு தமிழ், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிகவியல் (சிஏ), தாவரவியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்விற்கு வரும்போது 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை அசல், நகல் - 2, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-4, மாணவா் பெயரில் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் முதல் பக்க நகல் 2, இணையதளத்தில் இக்கல்லூரியில் சோ்க்கை பெற விண்ணப்பித்த விண்ணப்பப் படிவும் நகல்-2 உள்ளிட்டவைகள் அனைத்தும் அசல், நகல்களை எடுத்துவர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

440 கிராம் கஞ்சா வைத்திருந்த லாரி ஓட்டுநா் கைது

மத்தியப் பிரதேசத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 440 கிராம் கஞ்சாவை லாரியில் கொண்டுவந்த ஓட்டுநரை போலீஸாா் கைதுசெய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(26). லார... மேலும் பார்க்க

வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!

ஆனங்கூரில் வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரணை செய்துவருகிறாா். ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் மூளை நரம்பியல் தனிப்பிரிவு: எம்.பி.கோரிக்கை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ ஓரிரு நாளில் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். நாமக்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு தோ்த் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் அா்த்தநாரீசுவரா் வீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் சனிக்கிழமை சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து மகாநாட்டின் சாா்பில் இந்த சுவாமி திர... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 10-இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க