செய்திகள் :

48 நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி: மத்திய அரசு

post image

‘2023-24-இல் 48 நாடுகளில் இருந்து இந்தியா தங்கம் இறக்குமதி செய்தது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெவ்வேறு இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன’ என மாநிலங்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மிகவும் விருப்பத்துக்குரிய நாடு அல்லது தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் (எஃப்டிஏ) தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.

மிகவும் விருப்பத்துக்குரிய நாடு அடிப்படையில் தங்கக் கட்டிகள் மீது 6 சதவீதமும், சுத்திகரிக்கப்படாத தங்கத்தின் மீது 5.35 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 2023-24-இல் 48 நாடுகளில் இருந்து இந்தியா தங்கம் இறக்குமதி செய்தது. உள்நாட்டு தேவைகள், பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில்கொண்டு தங்கத்தின் மீதான வரியை குறைப்பது குறித்து பிற நாடுகளுடனான எஃப்டிஏ ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க