செய்திகள் :

5 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.21ல் முதல் ஏப்.27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். அதிக வெப்பநிலையும். அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை இன்று (21-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (22-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கும்போது, பிற மாநிலங்களில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதென தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழ... மேலும் பார்க்க

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய... மேலும் பார்க்க

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட... மேலும் பார்க்க

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார். நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடக்கம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம... மேலும் பார்க்க