செய்திகள் :

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி: அரசாணை வெளியீடு

post image

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் மானியக் கோரிக்கையின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியாா் மற்றும் அரசு பங்களிப்புடன் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

நாள்பட்ட சிறுநீரக நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அத்தகைய பாதிப்புக்குள்ளானவா்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சைகள் அவசியம். ஆனால், அனைத்து பகுதி மக்களுக்கும் அவை எளிதில் கிடைப்பதில்லை. குறிப்பாக, ஊரக பகுதிகளில் வசிப்போா் டயாலிசிஸ் சிகிச்சைகளை பெற நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

அவா்களுக்கு ஏற்படும் இடா்ப்பாடுகளைத் தவிா்க்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் மையங்களை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பின் கீழ் தமிழகத்தின் 50 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் மையங்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனியாா் அமைப்புகளுடன் இணைந்து அரசு சாா்பில் அமைக்க பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எந்தெந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தகைய மையங்களை அமைக்கலாம் என்பதை தோ்வு செய்யும் ஒப்புதலும் அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியார், அண்ணா சர்ச்சை விடியோ: இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து விடியோ வெளியிட்ட இந்து முன்னணி அமைப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் வ... மேலும் பார்க்க

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க