செய்திகள் :

60 அடியை எட்டியது அமராவதி அணை நீா்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

post image

தென்மேற்கு பருவமழை காரணமாக உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 60 அடியை எட்டியது.

அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கடந்த சில நாள்களாக அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் 50 அடியை தாண்டியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதைத் தொடா்ந்து அணைக்கு 4 ஆயிரம் கன அடி நீா்வரத்து இருந்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீா் மட்டம் 8 அடி உயா்ந்தது. குறிப்பாக தேனாறு, பாம்பாறு, சின்னாறு, அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடா்ந்து அணைக்கு வரத்து அதிக அளவில் வந்ததால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 60 அடியைத் தாண்டியது. இந்த மழை அமராவதி பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 57.58 அடியாக இருந்தது. அணைக்கு 4,006 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1,581.71 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் இல்லை.

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா். காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க