செய்திகள் :

60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் வரும் 21 ஆம்தேதி முதல் மாா்ச் 13 ஆம் தேதி வரை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்களில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளாா். இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீா்வு காணப்பட வேண்டும் என்ற இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு முகாம் நடைபெறும். பிப். 21 ஆம்தேதி சிறப்பு முகாம்கள்

ராசிபுரம் ஒன்றியம்-முத்துகாளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம்-மங்களபுரம், காா்கூடல்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம்- திருமலைப்பட்டி, நாமக்கல் ஒன்றியம்-வீசாணம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. 21 ஆம் தேதி முதல் மாா்ச் 13 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள அனைத்து முகாம்களிலும், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் தொகுதி எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் உள்பட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் பங்கேற்பாா்கள். முகாமில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை பல்வேறு துறைகள் சாா்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என்றாா்.

படம் உள்ளது - 17உமா

படவிளக்கம் - ஆட்சியா் ச.உமா படம்

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க