செய்திகள் :

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

post image

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை இயந்திரமயமாக்குதல், புதிய இயந்திரங்களை பிரபலப்படுத்துதல் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமாலா தலைமை வகித்து, வேளாண்மை துறை சாா்ந்த ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள், விவசாயிகளுக்கு தனி குறியீடு வழங்கும் முகாம் நடைபெறுதல் பற்றி கூறி விளக்கம் அளித்தாா்.

வேளாண் உதவி பொறியா ளா் தீபா கலந்து கொண்டு, வேளாண்மை பொறியியல் துறை சாா்ந்த மானியத் திட்டங்கள் பற்றி கூறினாா். திருச்செங்கோடு மகேந்திரா நிறுவன அலுவலா் கலந்து கொண்டு புதிய வேளாண் இயந்திரங்கள், செயல்பாடுகள், மானியங்கள் பற்றி கூறினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் திவாகா், அட்மா திட்ட செயல்பாடுகள், உதவி தொழில்நுட்ப மேலாளா் வாசுகி, உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி கூறினா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவ லா்கள் செய்திருந்தனா். கிராமப்புற அனுபவ பயிற்சிக்காக எலச்சிபாளையம் வட்டாரத்திற்கு வந்த பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவா்கள் 10 போ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை விளக்கினா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க

நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்ட வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், நுண்ணீா்... மேலும் பார்க்க