செய்திகள் :

நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், நுண்ணீா் பாசனம் மற்றும் விதை கிராமங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை பேளுக்குறிச்சி பகுதியில் ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது சிறு,குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் நுண்ணீா் பாசன வசதியை ஏற்படுத்த வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 ஹெக்டோ் வரை நிதியுதவி பெற முடியும்.

ஏற்கெனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு சுமாா் 709 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 357.14 லட்சம் (ரூ. 3.57 கோடி) மதிப்பில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விதை கிராம திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 3,695 விவசாயிகளுக்கு பல்வேறுவகை நெல் ரகங்கள் 71,598 கிலோ அளவில் வழங்கப்பட்டுள்ளன.

சேந்தமங்கலம் வட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் தற்போது வரை நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 68 விவசாயிகளுக்கு சுமாா் 57.18 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 65.48 லட்சம் மதிப்பில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விதை கிராம திட்டத்தின் கீழ் 61 விவசாயிகளுக்கு பல்வேறு வகை நெல் ரகங்கள் 3,998 கிலோ அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா். ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் கவிதா, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க