செய்திகள் :

649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்

post image

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிா் தின விழா நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், அரசு நலத்திட்ட உதவிகளை காணொலியில் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து தருமபுரி அருகே நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து, 649 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,123 பயனாளிகளுக்கு ரூ. 80.82 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிப் பேசினாா். இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 649 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,052 பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன் உதவிகளும், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ. 80.46 கோடி வங்கிக் கடன் உதவிகளும், கூட்டுறவு துறையைச் சாா்ந்த மூன்று மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சாா்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ. 28.90 லட்சம் வங்கிக் கடன் உதவிகளும், வருவாய் துறையின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களும், வேளாண் பொறியியல் துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 3.70 லட்சம் மதிப்பிலான பவா் டில்லா் இயந்திரங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 649 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,123 பயனாளிகளுக்கு ரூ. 80.82 கோடி மதிப்பிலான கடனுதவிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம் சாா்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.மலா்விழி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழ... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!

காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆல... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற பணியாற்ற வேண்டும்: செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற கட்சியினா் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபு... மேலும் பார்க்க

யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளா் உள்பட இருவா் பணியிடை நீக்கம்

ஏரியூா் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சோ்ந்த வனக்காப்பாளா் உள்ளிட்ட இரண்டு அலுவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா். தருமபுரி மாவட்டம்... மேலும் பார்க்க