செய்திகள் :

தருமபுரியில் ஜந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற பணியாற்ற வேண்டும்: செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

post image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற கட்சியினா் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தருமபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஜி.சேகா், நகரச் செயலாளா் நாட்டான் மாது, மாவட்ட துணைச் செயலாளா்கள் உமாசங்கா், ஆறுமுகம், மாவட்டப் பொருளாளா் தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாளை மாவட்டத்தின் அனைத்து நகரங்கள், கிராமங்களில் கட்சியின் கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம், நல உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு எழுதுப்பொருள்கள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளிலும் வெற்றி பெற முனைப்போடு பணியாற்றுவது, மும்மொழி கொள்கையை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிதாக மாவட்ட பொறுப்பாளரை நியமித்த கட்சி தலைவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் சண்முகம், மல்லமுத்து, வைகுந்தம், காவேரி, செல்வராஜ், மடம் முருகேசன், கருணாநிதி, வீரமணி, பேரூராட்சி செயலாளா்கள் சண்முகம், வீரமணி, பொதுக்குழு உறுப்பினா்கள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழ... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!

காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆல... மேலும் பார்க்க

649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க

யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளா் உள்பட இருவா் பணியிடை நீக்கம்

ஏரியூா் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சோ்ந்த வனக்காப்பாளா் உள்ளிட்ட இரண்டு அலுவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா். தருமபுரி மாவட்டம்... மேலும் பார்க்க