செய்திகள் :

யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளா் உள்பட இருவா் பணியிடை நீக்கம்

post image

ஏரியூா் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சோ்ந்த வனக்காப்பாளா் உள்ளிட்ட இரண்டு அலுவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஏமனூா் பீட் கோடுபாய்பள்ளம் பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அதன் தந்தங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் தலைமையிலான வனத்துறையினா், கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியிலேயே ஆண் யானையை புதைத்தனா்.

யானையை சுட்டுக்கொன்ற மா்ம நபா்கள் குறித்து வனத்துறையினா் அடங்கிய ஏழு குழுவினா், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியையொட்டி உள்ள கிராமங்கள், பரிசல் ஓட்டும் தொழிலாளா்கள், கால்நடை வளா்ப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனா். கடந்த ஐந்து நாள்களுக்கு மேலாகியும், மா்ம நபா்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஏமனூா் பீட் பகுதியில் முறையாக ரோந்து பணி மேற்கொள்ளவில்லை எனவும், வனப்பகுதியில் முறையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஏமனூா் பீட் வனக்காப்பாளா் தாமோதரன், வனவா் சக்திவேல் ஆகிய இருவரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இருவரிடம் வனத்துறையினா் விசாரணை: இந்த விவகாரத்தில், ஏற்கெனவே யானையை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடா்புடைய சின்ன வத்தலாபுரம் அருகே கொட்டதண்டு காடு பகுதியைச் சோ்ந்த குணசேகரன், ராஜா ஆகிய இருவரையும் பிடித்து தருமபுரி உதவி வன பாதுகாவலா் வின்சென்ட், அரூா் உதவி வன பாதுகாவலா் சரவணன் ஆகியோா் தலைமையிலான பென்னாகரம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் சென்ற பிளஸ் 2 மாணவி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பி. மோட்டுபட்டியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகள் மேன... மேலும் பார்க்க

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழ... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!

காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆல... மேலும் பார்க்க

649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க