செய்திகள் :

7.5 % இடஒதுக்கீடு: சரிபாா்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

post image

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மருத்துவம், பொறியியல் உள்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பயன்பெறவுள்ள மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 18,35,456 மாணவா்கள் விவரங்களை சரிபாா்த்தல் மற்றும் 24,646 மாணவா்கள் விவரங்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகள் நிலுவையில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு தோ்வு செய்யப்படாமல் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகள் படிக்கும் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்க இயலாது.

அதன்படி 7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபாா்த்தல் எமிஸ் தளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஒன்றாம் வகுப்பு முதல் படித்த பள்ளிகள், தமிழ் வழி, ஆங்கில வழி போன்ற விவரங்களைத் தோ்வு செய்து ஆசிரியா்கள் சரிபாா்த்து 7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபாா்த்தல் பட்டியலை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்ற பட... மேலும் பார்க்க

சென்னையில் ரெளடி சுட்டுப் பிடிப்பு!

சென்னையில் பதுங்கியிருந்த ரெளடியைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரைக் கடத்திச் சென்று மிரட்டி ப... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் ஆளுநா்

மூன்று நாள் பயணமாக தில்லி சென்ற ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினாா். நண்பரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஆளுநா் செவ்வாய்க்கிழமை தில்லி சென்றாா். தில்லி... மேலும் பார்க்க

மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா? தங்கமணி கேள்வி

பூரண மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கு சிறப்பு போட்டித் தோ்வு ஏப்ரல் இறுதிக்குள் அறிவிப்பு

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யும் சிறப்பு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிடப்படும் என சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வி... மேலும் பார்க்க

நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும்: 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டம் - அமைச்சா் கே.என்.நேரு உறுதி

நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே... மேலும் பார்க்க