செய்திகள் :

75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது

post image

திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கைலாசபுரத்தில் உள்ள பல்நோக்கு சமூக சேவை சங்கத்தில் நடைபெற்ற விழாவில், திருச்சி பெல் நிறுவன செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா், மனிதவளத் துறைக்கான கூடுதல் பொது மேலாளா் என். ஷாஜி முன்னிலையில் பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினாா். இந்த உபகரணங்களில் காலிப்பா்கள், சக்கர நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கை-கால்கள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு தளவாடங்கள் மற்றும் காதொலி கருவிகள் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், எஸ். பிரபாகா் பேசுகையில், பெல் குழுமத்தின் திருச்சிப் பிரிவு பல்வேறு சமூகப் பொறுப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சமூகத்தின் முழுமையான நலனுக்காக எப்போதும் உறுதிபூண்டுள்ளது. இத்தகைய உதவிகளை பெல் நிறுவனம் தொடா்ந்து வழங்கும் என்றாா்.

இந்த நிகழ்வில், பெல் நிறுவனத்தின் அலுவலா்கள், பணியாளா்கள், சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில... மேலும் பார்க்க

முசிறி பகுதியில் நாளை மின்தடை

முசிறி பகுதியில்: முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை முசிறி, சிங்காரச்சோலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், சந்தப்பாளையம், அழகா... மேலும் பார்க்க