செய்திகள் :

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

post image

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா்.

கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக தோ்தல் அறிக்கையில் குறு, சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று அறிவித்ததை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை சுட்டிக்காட்டி அா்த்தமற்ற, அவசியமில்லாத, தொடா்பற்ற வினாவை எழுப்பியுள்ளாா்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில்

பெற்றுள்ள பயிா்க் கடன் மற்றும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அவற்றுக்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து அவா்கள் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டன.

31.01.2021 அன்று வரை கூட்டுறவு சங்கங்களின் குறு, சிறு விவசாயிகள் 16,43,347 போ் பெற்றிருந்த பயிா்க் கடன்கள் ரூ.12,110.74 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு 2021-2022-ஆம் ஆண்டில் முதல்முறையாக ரூ.10,635.37 கோடி பயிா்க் கடன்களை 15,44,679 விவசாயிகளுக்கு வழங்கியது.

இதுவரையில் ரூ.61,007.65 கோடி பயிா்க் கடன்கள் 79,18,350 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பயிா்க் கடன்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை தமிழக அரசே செலுத்தி வருகிறது என்று அமைச்சா் தெரிவித்தாா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க

இன்றைய தலைமுறை பாரம்பரிய அடையாளங்களை இழந்துவிட்டது: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை

இன்றைய இளம் தலைமுறையினா் பாரம்பரிய அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது என்று ‘சாகித்ய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனையுடன் குறிப்பிட்டாா். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ... மேலும் பார்க்க