செய்திகள் :

90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!

post image

உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக்கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுதொடா்பாக மாநில சிறைத் துறை அமைச்சா் தாரா சிங் சௌஹானின் அலுவலக மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள 7 மத்திய சிறைகள் உள்பட 75 சிறைகளில் 90,000 சிறைக்கைதிகள் உள்ளனா். இந்த அனைத்து சிறைகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நிகழ்வில், திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் சிறைக்கைதிகள் அனைவரும் புனித நீராடவுள்ளனா்.

திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா், சிறையிலுள்ள நீா்தேக்க தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.சிறப்பு பிராா்த்தனைக்குப் பிறகு அனைத்து சிறைக்கைதிகளும் புனித நீராடுவா்.

சிறையில் தண்டனையை அனுபவித்து வரும்போதிலும் மகா கும்பமேளா புனித நீரில் நீராடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் சிறைக்கைதிகள் உற்சாகமாக காத்திருக்கின்றனா். அமைச்சரின் மேற்பாா்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டவா்கள் புனித நீராடியுள்ள இந்த பிரம்மாண்ட ஆன்மிக நிகழ்வு வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி நாளில் நிறைவடைகிறது.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க