செய்திகள் :

AI, DeepFake வீடியோக்கள் வெளியிட்ட யூடியூப் சானல்கள்; ரூ.4 கோடி கேட்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் வழக்கு

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஏஐ தொழில் நுட்பத்தில் தங்களது புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறான வீடியோ தயாரிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவர் தொடர்பான வீடியோ, புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

அப்படி இருந்தும் யூடியூப் சானல்களில் ஏஐ மற்றும் டீப்ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் சானலுக்கு எதிராக இரண்டு பேரும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரூ.4 கோடி மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவோடு சேர்ந்து யூடியூப் மற்றும் சோசியல் மீடியா வீடியோ லின்க்களை இணைத்துள்ளனர்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்

இது போன்ற வீடியோக்கள் பகிரப்படுவதால் மற்றவர்கள் அது போன்ற வீடியோக்களைத் தயாரிக்கின்றனர். ஏஐ மூலம் உண்மையற்ற கற்பனையான வீடியோ தயாரிக்கின்றனர்.

ஏஐ பிளாட்பார்ம் எதிர்மறையான சித்தரிக்கும் வகையில் வீடியோக்களை உருவாக்க வகை செய்கிறது. அவ்வாறு உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகும்போது அத்தகவல்கள் மேலும் பரவுவதற்கு வழி வகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

யூடியூப் மட்டுமல்லாது கூகுள் நிறுவனத்திற்கு எதிராகவும் இரண்டு பேரும் இம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் 2 படத்திற்குப் பிறகு புதிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதோடு சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுத் தனித்து வாழ்வதாக செய்தி வந்தது. ஆனால் இப்போது இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து சேர்ந்து வாழ்கின்றனர்.

சைபர் குற்றம்: "ஆன்லைனில் கேம் விளையாடிய என் மகளிடம் நிர்வாண போட்டோ கேட்டனர்" - அக்‌ஷய் குமார் வேதனை

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப... மேலும் பார்க்க

Asha Bhosle: `ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்த தடை' - மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாட... மேலும் பார்க்க

உலகின் பணக்கார நடிகரான ஷாருக் கான் - பின்னுக்குத் தள்ளப்பட்ட நடிகர்கள்

உலக பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்த... மேலும் பார்க்க

Akshay Kumar: "20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு உண்பதில்லை" - அக்‌ஷய் குமாரின் டயட் ப்ளான்

சமீபத்தில் திரையுலகில் 38 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அக்‌ஷய் குமார், தனது தொழிலில் இவ்வளவு நாட்கள் வெற்றியுடன் இருப்பதற்கு உதவிய தனது பழக்க வழக்கங்கள் பற்றி மனம் திறந்துப் பேசியிருக்கிறார். நடிகர் அ... மேலும் பார்க்க

``சல்மானுக்கு எதிராக பேசியதால் புறக்கணித்தனர்; ஆனால் இன்று" - ரூ.1200 கோடி பிசினஸில் விவேக் ஓபராய்

சல்மான் கானை விமர்சித்த விவேக் ஓபராய் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் காதல் அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானுடன் சண்டையிட்டு பிரிந்த பிறகு, சில காலம... மேலும் பார்க்க

‘நியாயமற்றது என்றார்'- தன்னுடைய மகள் தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாதது குறித்து ராணி முகர்ஜி

71-வது தேசிய விருதுகள் நிகழ்வு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றிருந்தது. ஷாருக் கான், மோகன் லால், ஜி.வி. பிரகாஷ் உட்பட தேசிய விருது அறிவிக்கப்பட்ட அத்தனை திரைக்கலைஞர்களும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார... மேலும் பார்க்க