சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்: தில்லி கேபிடல்ஸ் இளம் வீரர்
AI படிப்பதற்கு இது சரியான காலகட்டமா... தனியார் பயிற்சி மையங்களில் பயிலலாமா?- கல்வியாளர் சொல்வதென்ன?
எங்கு நோக்கினும் AI என்னும் Artificial Intelligence பற்றியே பேசிக்கொண்டிருக்கும் காலம் இது. எந்தத் துறையை எடுத்தாலும் அதில் AI-இன் பங்கு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த விஷயம் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்க தனியார் பயிற்சி மையங்கள் அதிக அளவில் முளைத்திருக்கின்றன.
இந்த நிலையில்... AI பற்றி படிப்பதற்கு இது சரியான காலகட்டமா? அப்படி பயின்றாலும் தனியார் பயிற்சி மையங்களில் பயிலலாமா? என்பது பற்றி கல்வியாளர் கலைமணியிடம் பேசினோம்.

இது தொடர்பாகப் பேசிய அவர், "ஜான் மெக்கார்த்தி என்பவர் 1950-லேயே AI தொழிநுட்பத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அதன் பரிணாமங்கள்தான் இப்போது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் AI படிப்புகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2020-ல்தான் அறிமுகமானது. அந்தப் படிப்பை படித்தவர்களில் எத்தனைப் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்றால், அது கேள்விக்குறிதான். மிகக் குறைவான நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படிப்பைக் கற்றுக்கொடுப்பதற்கு அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் தற்போதைக்கு கிடையாது.
ஆனால் நிறைய கல்லூரிகள் பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற்று AI தொழிநுட்பப் படிப்பை ஆரம்பித்து விடுகிறார்கள். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட்டுகளை விற்று பணம் சம்பாதிப்பதற்காக இந்தமாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள். AI படிப்புகள் பற்றி பணம் கொடுத்து இன்ப்ளூயன்சர்களை சமூக வலைதளங்களில் பேச வைக்கிறார்கள். AI- தான் இனி எதிர்காலம் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். ஆனால் AI -யைப் பொறுத்தவரை அது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த டிகிரி படித்திருந்தாலும் கற்றுகொள்ள முடியும்.
2020-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த AI படிப்பை இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனம் என்று சொல்லக்கக்கூடிய சென்னை ஐஐடியில் கடந்த வருடம்தான் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் AI படிப்பை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று எண்ணி அதற்கேற்றவாறு பேராசிரியர்களுக்கு உரிய முறையில் பயிற்சிகள் கொடுத்து, லேப் வசதிகளை ஏற்படுத்திய பிறகே இந்தப் படிப்பை அங்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சென்னை ஐஐடி, பிஎஸ்ஜி டெக் மாதிரியான ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே சரியானத் துறைச்சார்ந்த வல்லுநர்களை வைத்து AI படிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் AI படிப்பை படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். கூகுள் CEO சுந்தர்பிச்சை, மைக்ரோ சாப்ட் CEO சத்யா நாதெல்லா போன்றவர்கள் எல்லாம் சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்ததால்தான் இன்றைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு என்று அரசாங்கம் கல்விக்கடன் தருகிறது. அதனைப் பயன்படுத்தி சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.

10- 20 லட்சம் பணத்தைக் கொடுத்து AI படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து கோச்சிங் சென்டர்களில் சேர்த்து AI யை முதன்மையாகக் கருதி படிக்க வேண்டாம். AI சம்பந்தமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரைக்குமான சான்றிதழ் படிப்புகளைக் கற்றுத்தருகிறார்கள். அதனைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்" என்று கல்வியாளர் கலைமணி தெரிவித்தார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks