Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ...
சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்: தில்லி கேபிடல்ஸ் இளம் வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என தில்லி கேபிடல்ஸின் இளம் வீரர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
விசாகப்பட்டினத்தில் நாளை (மார்ச் 30) நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
சன்ரைசர்ஸை கட்டுப்படுத்துவோம்
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் அதிரடியான ஆட்டத்தைக் கட்டுப்படுத்த தங்களிடம் சிறப்பான திட்டங்கள் இருப்பதாக தில்லி கேபிடல்ஸின் இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் சிறப்பான அணி. அவர்களிடம் சிறந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால், எங்களது அணியில் நிறைய ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். சன்ரைசர்ஸுக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் உள்ள சிறப்பான திட்டங்களை போட்டியின்போது செயல்படுத்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியைக் கட்டுப்படுத்துவோம் என்றார்.