செய்திகள் :

Bison: ``வாழ்நாள் அனுபவம், ஆன்மாவை வலிமைப்படுத்தியது.." -துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் சொல்வதென்ன?

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வந்த பைசன் (Bison) படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் 5-வது திரைப்படம் பைசன் - களமாடன். கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் குறித்து முன்னதாக அவர், “இது படம் உண்மை மற்றும் புனைவு கலந்த கதையாக உருவாகி வருகிறது" எனக் கூறியிருந்தார்.

துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி, அனுராக் அரோரா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

பைசன் படக்குழு

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மகான் படத்தைத் தொடந்து பைசனில் இணைந்தார். இது அவரது கரியரில் முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்லாஸ் எண்டெர்டயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், "அத்தனை நாள்களின் அயராத உழைப்பு, அயராத முயற்சிகள் மற்றும் நிலையான ஆதரவு அனைத்தும் எல்லையற்ற உணர்ச்சிகளாக ஒன்றிணைந்துள்ளன" என எழுதியுள்ளார்.

Mari Selvaraj

துருவிக்ரம் தனது சமூக வலைத்தள பக்கங்களில், "சில ஆண்டுகள் தயாரிப்பு, சில மாதங்கள் படபிடிப்பில் இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி இறுதியில் பைசன் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்துக்கான தயாரிப்பும் படபிடிப்பும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. என் ஆன்மாவை வலிமைப்படுத்தியதற்காகவும் எனக்கு வாழ்நாள் அனுபவத்தை வழங்கியதற்காகவும் நன்றி மாரி செல்வராஜ் சார்." எனப் பதிவிட்டுள்ளார்.

NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்குநர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 'ராயன்' படத்தை இயக்கியிருந்தார்.தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி முடித்திருக்... மேலும் பார்க்க

`தனுஷ் சார் சொன்ன மாதிரி, ஜாலியா வாங்க ஜாலியா போங்க' - 'NEEK' படத்தை பாராட்டிய தமிழரசன் பச்சமுத்து

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க

Jyothika: "அழகூரில் பூத்தவளே..." - ஜோதிகாவின் ரீசன்ட் க்ளிக்ஸ் | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

Hey Ram: சம்பளம் வாங்காத ஹீரோ; கருப்பு வெள்ளை குறியீடு... இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா?

`ஹே ராம்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.இன்று வரை காந்தியைப் பற்றிய பல சீரிஸ் மற்றும் திரைப்படம் எடுப்பவர்களுக்கு முதல் இன்ஸ்பிரேஷனே `ஹே ராம்' திரைப்படம்தான். ரஜினி தொடங்கி மண... மேலும் பார்க்க

Jyothika : `ஹீரோக்களுடன் டூயட் பாடுறதை 20 வருடங்களுக்கு முன்பே நிறுத்திட்டேன்' - ஜோதிகா

காதல் திரைப்படங்களில் நடிப்பதை 20 வருடங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டேன் என்று ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.‘36 வயதினிலே’ படம் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொட... மேலும் பார்க்க

Sabdham: `எனக்கு பட வாய்ப்பு குறைவாக தான் வருது... ஏன்னு தெரில!' - `சப்தம்' பட விழாவில் நடிகர் ஆதி

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான `ஈரம்' திரைப்படத்தின் மூலம் நம்மிடையே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அறிவழகன்.அப்படத்திற்குப் பிறகு பிறகு மீண்டுமொரு முறை நடிகர் ஆதியுடன் இணைந்து `சப்தம்' படத்தை எடுத்திருக்கிறா... மேலும் பார்க்க