அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சரிவில் முடிந்த பங்குச்சந்தை!
மும்பை : பங்குச்சந்தை வியாழக்கிழமை(பிப். 20) சரிவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவில் முடிவடைந்தன.
சென்செக்ஸ் இறுதியில் 203.22 புள்ளிகள் (0.27 சதவீதம்) இழப்புடன் 75,735.96-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இறுதியில் 19.75 புள்ளிகள் (0.09 சதவீதம்) இழப்புடன் 22,913.15-இல் நிறைவடைந்தது.