செய்திகள் :

Bofors Case: ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்ட `போஃபர்ஸ்' ஊழல் வழக்கு... மீண்டும் விசாரணை..?!

post image

1980-களில் புதைந்துப்போன வழக்கை தற்போது மீண்டும் தூசி தட்டி உள்ளது சிபிஐ.

1980 காலக்கட்டங்களில் இந்திய பிரதமராக இராஜீவ் காந்தி இருந்தப்போது நடந்த மிகப்பெரிய ஊழல் 'போஃபர்ஸ்' (Bofors). 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கும், ஸ்வீடனுக்கும் இடையே ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஸ்வீடன் வரலாற்றிலேயே, அந்த நாட்டுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ராணுவ ஆயுத ஒப்பந்தம் இது தான். இந்த ஒப்பந்தத்தின் மொத்த தொகை ரூ.1,437 கோடி ஆகும்.

காங்கிரஸ் அடைந்த அதிர்ச்சி தோல்வி...

1987-ம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தை பெற ஸ்வீடனின் பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக போஃபர்ஸ் என்ற வங்கியிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆயுத ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் வங்கி இந்தியாவின் அப்போதைய பல அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு 64 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியுள்ளது என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அரசியல்வாதிகளில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஒருவர் என்பதுதான் இந்த சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.

இந்த ஊழலின் விளைவாக, அடுத்து வந்த 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

2004-ம் ஆண்டு, இந்த சம்பவத்திற்கும், ராஜீவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இந்த ஒட்டுமொத்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து போஃபர்ஸ் ஊழல் சம்பந்தமான தகவல்களை கோரியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் உளவு துறை ஏஜென்சி Firmfax-ன் இந்த ஊழல் சம்பந்தமான தகவல்கள் தற்போது அமெரிக்காவிடம் உள்ளது. இந்தத் தகவல்களை கேட்டு அமெரிக்க நீதி துறைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது சி.பி.ஐ.

டெல்லி உயர் நீதிமன்றம்

அமெரிக்காவைச் சேந்த தனியார் உளவுத்துறையின் ஏஜென்சி ஃபிரிம்ஃபேக்ஸ்-ன் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மேன். கடந்த 2017-ம் ஆண்டு, இவர் போஃபர்ஸ் ஊழல் பற்றி பேசும்போது, இந்த ஊழலில் பணமாக 64 கோடி ரூபாய் சுவிஸ் வங்கி கணக்கு 'மான்ட் பிளான்க்'கில் வைத்திருப்பதை தெரிந்துக்கொண்ட ராஜீவ் காந்தி மிகவும் கோபப்பட்டார். அதுக்குறித்து அவர் விசாரிக்க முனைந்தப்போது அப்போதைய அரசு அவரின் முயற்சிகளை தடுத்துவிட்டது என்று கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு, ஃபிரிம்ஃபேக்ஸ் நிறுவனம் இந்த ஊழல் சம்பந்தமான தகவல்களை அமெரிக்க அரசிடம் இருந்து பெற டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. அதன் விளைவாக, தற்போது சி.பி.ஐ அமெரிக்க நீதித்துறையை நாடியுள்ளது.

ஹமாஸை எச்சரித்த ட்ரம்ப்: 'பணய கைதிகளை விடுவியுங்கள், இறுதி எச்சரிக்கை' - என்ன நடக்கிறது காசாவில்?

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போர், நிறுத்தத்தை எட்டியிருந்தாலும் அவை தற்காலிக நிறுத்தமே. இன்னும் பேச்சுவார்த்தைகள் போய்கொண்டிருக்கிறது... பணய கைதி அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். ... மேலும் பார்க்க

Summer: வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி முதல் வெள்ளரிக்காய்ப் பாயசம் வரை... வெயில் கால உணவுகள்!

வெந்தயப் பணியாரம் வெந்தயப் பணியாரம்தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், உளுந்து - 6 டீஸ்பூன், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய் - 2, நெய் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 10 டீஸ... மேலும் பார்க்க

``போன வருஷம் ஓட்டுக்காக வாழ்த்து சொன்னாரா மோடி?'' - வருத்தத்தில் அய்யா வைகுண்டர் பக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் நேற்றைய தினம் உலகெங்கும் இருக்கும் வைகுண்டர் பக்தர்களால் கொண்டாடப் பட்டது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் இது குறித்து வாழ்த்... மேலும் பார்க்க

அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; மற்ற கட்சிகளின் கருத்துகள் என்ன?

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்ட... மேலும் பார்க்க

US: ``இதை மீறினால், வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள்!'' - ட்ரம்ப் அதிரடி உத்தரவு

பிற நாடுகள் மீது மட்டுமல்ல... தன் நாட்டினர் மீதும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதில் ஒரு பகுதியாக, தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்... மேலும் பார்க்க