செய்திகள் :

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

post image

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் (ஜூன் 4) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு அடுத்த நாளே, "2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது." என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.

பாஜக - மக்கள்தொகை கணக்கெடுப்பு
பாஜக - மக்கள்தொகை கணக்கெடுப்பு

இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், "மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல.

நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.

அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன.

அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன்.

தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.

நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது.

1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும்.

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.

தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது.

ஆனால், இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!

பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது.

உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்.

அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்!

நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! தமிழ்நாடு போராடும்!தமிழ்நாடு வெல்லும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

Trump Vs Musk : நட்பில் விரிசல்; 'எலான் மஸ்கிற்கு அடைக்கலம் தர தயார்' - ரஷ்யா கமென்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நல்ல பிணைப்புடன் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், இப்போதும் எலியும், பூனையுமாக மாறி உள்ளனர். இதையடுத்து ட்ரம்பின் முன... மேலும் பார்க்க

அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகரன்?

நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரை வருகிறார்.அப்போது கூட்டணிக் கட்சித்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயன்று வருவதாகச் சொல்லப்... மேலும் பார்க்க

Amit Shah : முக்கிய சந்திப்புகளும், அசைன்மென்ட்டுகளும்! - அமித் ஷாவின் மதுரை விசிட் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மா... மேலும் பார்க்க

'எனக்கு பதவி தான் வேண்டும்; அடம்பிடிக்கும் உதயநிதி' - ஆர்.பி உதயகுமார் பேசியதென்ன?

`திமுகவில் உள்கட்சி பூசல் உருவாகி உள்ளது' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியிருக்கிறார்.இது குறித்து ஆர்.பி உதயகுமார் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது..."மன்னராட்சிக்கு வழிவகுக்க உதய... மேலும் பார்க்க

'I am Alright; சென்னை போகிறேன், அங்கு தான்..!' - குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ் பேசியதென்ன?

பாமக-வில் தந்தை - மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்த... மேலும் பார்க்க

Delimitation: `கமலாலய மவுத் பீஸ்; டெல்லி பண்ணையார்களின் அடிமை’ - எடப்பாடி மீது அமைச்சர் காட்டம்

எதிர்க்கட்சிகளின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது மத்திய பாஜக அரசு.அதேபோல், 2021-ல் கொரோனாவால் எடுக்க முடியாமல்போன மக்கள்தொகை கணக்கெடுப்பும... மேலும் பார்க்க