செய்திகள் :

DC vs KKR: `நாங்கள் தோற்றதற்கு இதுதான் காரணம்..' - விளக்கும் டெல்லி கேப்டன் அக்சர்

post image

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

rahane - axar
rahane - axar

அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங் தடுமாறினாலும் நடுவில் அக்சர் - டு பிளெஸ்ஸிஸ் 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது.

அந்த நேரத்தில் கொல்கத்தாவின் ஆன்ஃபீல்டு கேப்டனாக சுனில் நரைன் எடுத்த மாஸ்டர் மூவ்களால் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பேட்டிங் (27 ரன்கள்), பவுலிங் (3 விக்கெட்டுகள்), ஃபீல்டிங் (கே.எல். ராகுல் ரன் அவுட்) கேப்டன்சி (வருண் சக்ரவர்த்தி 18-வது ஓவர் கொடுத்தது) என அனைத்திலும் கலக்கிய நரைனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கபட்டது.

தோல்விக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்டன் அக்சர், "15 - 20 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். சில விக்கெட்டுகளை சாதாரணமாக இழந்துவிட்டோம். பவர்பிளேவுக்குப் பிறகு அவர்களைக் கட்டுப்படுத்தியதுதான் ஒரே பாசிட்டிவ். சில பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும், 2 -3 பேட்ஸ்மேன்களால் டார்கெட்டுக்கு நெருக்கமாகச் சென்றோம்.

அக்சர் படேல்
அக்சர் படேல்

விப்ராஜ் பேட்டிங் செய்யும்போது நம்பிக்கை இருந்தது. அஷுதோஷ் இருந்திருந்தால் முதல் போட்டியில் செய்ததை அவர்கள் மீண்டும் செய்திருப்பார்கள். டைவ் அடிக்கும்போது சதை லேசாகக் கிழிந்துவிட்டது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், அடுத்த போட்டிக்கு 3 - 4 நாள்கள் இருக்கிறது. அதற்குள் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.

CSK vs PBKS: `இனி துணிச்சலாகத்தான் பேட்டிங் செய்வோம்!' - மைக் ஹஸ்ஸி உறுதி

நாளை சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் மைக் ஹஸ்ஸி. சென்னை அணியின் மனநிலை, திட்டங்கள், வைபவ்... மேலும் பார்க்க

DC vs KKR: ``போட்டியின் திருப்புமுனையே அவர் வீசிய அந்த 2 ஓவர்தான்'' - வெற்றி குறித்து ரஹானே

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்ன... மேலும் பார்க்க

DC vs KKR: 4 in 1-ஆக மாயம் செய்த நரைன்; டெல்லியின் வெற்றியைப் பறித்த அந்த ஒரு மொமென்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதல் எல்.எஸ்.ஜி வரையில் டாப் 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன.கடைசி 4 இடங்களில் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த பீகார் முதலமைச்சர்!

IPL 2025 நேற்றைய போட்டிக்குப் பிறகு தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த சீசனின் அதிவேக அரைசதம் (17 பந்துகளில்), டி20 வரலாற்றில் குறைந்த ... மேலும் பார்க்க

IPL 2025 : பட்டையைக் கிளப்பும் Uncapped பிளேயர்ஸ்; தயாராகும் எதிர்கால இளம்படை | Uncapped 11

இன்றைய தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் மிகப் பெரும் பாதையை ஏற்படுத்தித்தரும் ஊடக வெளிச்சம் மிக்க தொடராக இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஹால், குல்தீப்... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: ``வைபவ் ஆட்டத்துக்குப் பின்னால் இருக்கும் இந்த 4 விஷயங்கள்'' - புகழும் சச்சின்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாரும் காணாத ஒரு ஆட்டத்தை 14 வயது சிறுவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஜெய்ப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற குஜராத் vs ராஜஸ்தான் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜரா... மேலும் பார்க்க