செய்திகள் :

Delhi Elections: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு `ஷாக்' கொடுத்த டெல்லி சட்டமன்றத் தேர்தல்!

post image

டெல்லியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவான சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இத்தேர்தல் முடிவுகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்தது. பா.ஜ.க 50 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க டெல்லியில் ஆட்சியை பிடிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 19 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஜங்க்புரா தொகுதியில் போட்டியிட்டார். இதில் பா.ஜ.க வேட்பாளர் தர்விந்தர் சிங்கிடம் மணீஷ் சிசோடியா மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது குறித்து சிசோடியா கூறுகையில், ``கட்சி தொண்டர்கள் கடினமாக உழைத்தார்கள். மக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனாலும் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.

அதிஷி

இதற்கு முன்பு சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக ஜங்க்பூரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருக்கிறார். இதே போன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். ஆரம்பத்தில் பின் தங்கி இருந்த கெஜ்ரிவால் பின்னர் முன்னேறி வந்தார். ஆனால் கடைசியில் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க வேட்பாளர் பர்வேஷ் சாஹேப் சிங்கிடம் தோற்றுப்போனார். பர்வேஷ் சாஹேப் சிங்தான் பா.ஜ.க சார்பாக முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பா.ஜ.க-வின் வீரேந்திர சச்சிதேவ் என்பவர் பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அதிஷி தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார். கடைசியாக கிடைத்த தகவலின் படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

Vikatan Weekly Quiz: மத்திய பட்ஜெட் டு டெல்லி தேர்தல் முடிவுகள்..! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், டெல்லி தேர்தல் முடிவுகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடிகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்வ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை; பாதிக்கப்பட்ட மனைவிக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு - தொடர் சிக்கலில் மகா., அமைச்சர்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே தனஞ்சே முண்டேயிக்கு ந... மேலும் பார்க்க

பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் - எப்படி சாத்தியம்?

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரியான பூனம் குப்தா இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளவு... மேலும் பார்க்க

1000-க்கு 'T' பதிலாக ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது? - பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

எண்களில் ஆயிரத்தை 1k என்று குறிப்பதை நாம் பார்த்திருப்போம். மில்லியனுக்கு 'M' என்ற வார்த்தையும் பில்லியனுக்கு 'B' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இடத்தில் ஆயிரத்திற்கு ( thousand) மட்டும் ஏன் 'T' ... மேலும் பார்க்க

Ed Sheeran: சென்னையில் கான்சர்ட் நடத்தும் பிரிட்டிஷ் பாடகர்; பேரன்பைக் கொடுக்கும் மக்கள்- யார் இவர்?

இங்கிலாந்தில் பிறந்த இவர் சென்னையில் கான்செட் நடத்தும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருப்பது பெரும் பிரமிப்பை உண்டாக்குகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வந்த இங்கிலா... மேலும் பார்க்க

முதல்வர் பதவி... மும்பை முதல்வர் இல்லத்தில் எருமையை பலியிட்டு பில்லிசூனியம் வைத்தாரா ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் முதல்வராக இருப்பவர்களுக்காக வர்ஷா என்ற அரசின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த இல்லத்தில் தான் முதல்வர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற... மேலும் பார்க்க