செய்திகள் :

Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்?

post image

Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் உபயோகிப்பதற்கும் நெபுலைசர் உபயோகிப்பதற்கும் என்ன வித்தியாசம். இரண்டையுமே உபயோகிக்கலாமா, எது வேகமான நிவாரணம் தரும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் 'நாள்பட்ட நுரையீரல் அழற்சி' பாதிப்பு போன்றவை உள்ளோருக்கு இன்ஹேலர் பரிந்துரைப்பது வழக்கம். இன்ஹேலர் என்பது மருந்தை, கேஸ் வடிவில் நோயாளிக்குக் கொடுப்பது.

இன்ஹேலர் என்பதை மூன்று வடிவங்களில் கொடுக்கலாம். 'டிரை பவுடர் இன்ஹேலர்' என்பதில் கேப்ஸ்யூல் இருக்கும். அதை இன்ஹேலர் கருவியில் போட்டுச் சுழற்றினால், அந்த கேப்ஸ்யூல் உடைந்துவிடும். அதை சம்பந்தப்பட்ட நோயாளி, வேகமாக இழுக்க வேண்டும். 

அடுத்தது 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' (metered dose inhaler) எனப்படும். இதிலும் கேஸ் வடிவில்தான் மருந்து உள் செலுத்தப்படும்.  பஃப் என்றும் சொல்வோம். பொதுவாக, இதையே இன்ஹேலர் என்று நாம் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.

மூன்றாவது, நெபுலைஸர் ( Nebulizer). இதில் திரவ வடிவில் உள்ள மருந்தை உள்ளே விட வேண்டும். திரவ மருந்தானது கேஸ் வடிவ துகள்களாக மாறி உள்ளிழுக்க வசதியாக இருக்கும்.

ஆஸ்துமா

ஆக, இந்த மூன்றிலுமே மருந்தை கேஸ் வடிவில்தான் கொடுக்கிறோம். கொடுக்கும் விதம் மட்டுமே வேறுபடும். யாருக்கு, எது சரியானது என்பது பல காரணிகளை வைத்துத் தீர்மானிக்கப்படும்.

அதாவது நோயாளியின் வயது, இன்ஹேலர் பயன்படுத்துவதை அவர் புரிந்துகொள்ளும் தன்மை, வேகமாக காற்றை உள்ளிழுக்கும் திறன், அழுத்தும்போது கேஸை சரியாக உள்ளிழுக்க வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால் மருந்து வீணாகிவிடும்.  'பல மாசமா இன்ஹேலர் யூஸ் பண்றோம்... பிரச்னை சரியாகலை' என்று சொல்லும் பலரைப் பார்க்கலாம். காரணம், அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தாததுதான்.

முதலில் குறிப்பிட்ட பவுடர் வடிவ இன்ஹேலரை பயன்படுத்துவதில் அதை வேகமாக உள்ளிழுப்பது மட்டும்தான் சவால். அந்தத் திறன் உள்ளவர்களுக்கு டிரை பவுடர் இன்ஹேலர்தான் பெஸ்ட்.

அது சூழலுக்கும் உகந்தது.    'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' பயன்படுத்தும்போது 'க்ளுரோஃப்ளுரோ கார்பன்' (Chlorofluorocarbons) என்ற நச்சுப்  பொருளும் வெளியாவதால், அது சூழலுக்கு ஏற்றதல்ல.

வயதானவர்களால் டிரை பவுடர் இன்ஹேலரை சரியாகப் பயன்படுத்த முடியாது. முழுமையாக உள்ளிழுக்க மாட்டார்கள். அதனால் மருந்தானது வாய்க்கும் தொண்டைக்கும் தான் போகுமே தவிர, நுரையீரல் வரை போகாது.

அவர்களுக்கு, அதிக மெனக்கெடல் இருக்கக்கூடாது, அதே சமயத்தில் மருந்தும் முழுமையாக உள்ளே போக வேண்டும் என்பதால்  'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' பரிந்துரைப்போம். அதை அழுத்தும்போது சரியாக உள்ளிழுக்காவிட்டால் மருந்தெல்லாம் வெளியேறிவிடும்.

இதைப் பயன்படுத்தும்போது சரியாக அழுத்தி, சரியாக உள்ளிழுத்து, 10 நொடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, பிறகு மூச்சை விட வேண்டும்.

இது பிடிபடாமல்தான் பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தச் சிக்கலை எதிர்கொள்ள ஸ்பேஸர் பயன்படுத்தலாம். 

Nebulizer

முதல் இரண்டு வகை இன்ஹேலர்களையும் பயன்படுத்த முடியாத நிலையிலோ, எமர்ஜென்சியிலோ, தீவிர மூச்சுத்திணறலுக்கு நெபுலைஸர் பயன்படுத்துவோம். 

இதிலும் மைனஸ் இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட நேரம் இதைப் பயன்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது சிறிதளவு மருந்து வீணாகும்.

இந்தக் கருவியைச் சுமந்துகொண்டு செல்வதும் சிரமம். எல்லா மருந்துகளையும் இதில் பயன்படுத்த முடிவதில்லை. பராமரிப்பும் முக்கியம். 

நெபுலைஸர் பயன்படுத்தும்போது  மாஸ்க் உள்ளிட்ட இணைப்புகளை முறையாகச் சுத்தம் செய்தே மறுபடி பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய மாஸ்க்கை இன்னொருவர் பயன்படுத்தக்கூடாது. நெபுலைஸர் பயன்படுத்தி முடித்ததும் வாய்க் கொப்புளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அந்த மருந்து தொண்டையில் வெள்ளையாகப் படிந்து பிரச்னையைத் தரும். எதைப் பயன்படுத்தினாலும் மருந்தின் அளவு, நோயாளியின் வயது, நோயின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து, மருத்துவரின் அறிவுரையோடுதான் பயன்படுத்த வேண்டும்.

இன்ஹேலரின் முழுமையான பலன் என்பது அதை எந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் உள்ளது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

தண்ணீர் கலந்த பாலில் சத்தே இருக்காதா? டயட்டீஷியன் விளக்கம்!

பால் ஏன் அவசியம் அருந்த வேண்டும்; அதில் என்னென்ன சத்துகள் உள்ளன; பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாமா; பாலில் தண்ணீர் கலக்கலாமா; யாரெல்லாம் பாலைத் தவிர்க்க வேண்டும் என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட... மேலும் பார்க்க

இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் மரணம், தப்பிய தமிழ்நாடு - எச்சரிக்கும் Dr. Rex Sargunam

மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் Coldfrif cough Syrup கொடுக்கப்பட்ட 14 குழந்தைகள் மரணமடைந்திருப்பது இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை தமிழ்நா... மேலும் பார்க்க

காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்!

ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நம் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதை எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை துலக்குவது? அதிலும் குறிப்பாக, இரவுக்கு உணவு... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு இருமல், ஆயுர்வேத இருமல் மருந்துகள் பாதுகாப்பானவையா?

Doctor Vikatan: இருமல் மருந்து குடித்த பல குழந்தைகள் மரணமடைந்தது குறித்து சமீபத்தில் செய்தியில் பார்த்தோம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அதை எப்படி அணுக வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கலாமா?... மேலும் பார்க்க

தலையணை உறையா அல்லது பாக்டீரியா காலனியா? எச்சரிக்கும் மருத்துவர்!

தூங்கும்போது தலையணை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேபோல் அதன் தூய்மையும் இன்றியமையாதது.அமெரிக்காவின் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஒரு வாரம் துவைக்காமல் பயன்படுத்தப்படும் த... மேலும் பார்க்க

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு காப்பர்-டி பாதுகாப்பானதா? - தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

பிரேசிலில் தனது தாயின் கருத்தடை சாதனத்தை (காப்பர்-டி) கையில் ஏந்தியபடி ஒரு குழந்தை பிறந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தையும் சமூக ஊடகங்களில் விவாதங்களை... மேலும் பார்க்க