செய்திகள் :

DOGE: `இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ரூ.182 கோடி ரத்து' -அமெரிக்க நிதி நிறுத்தப்பட்ட பிற நாடுகள் எவை?

post image

அமெரிக்காவில் எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் அரசு செயல்திறன் துறை (The Department of Government Efficiency (DOGE)), இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.182 கோடி) நிதியை நிறுத்தியுள்ளது.

DOGE அமெரிக்காவால் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துவகையான நிதியுதவிகளையும் நிறுத்தி வருகிறது. இதனால் இந்தியா, வங்காள தேசம், ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல வளரும் நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

Modi Trump

இதுகுறித்த DOGE சமூக வலைத்தளத்தில், "பின்வரும் விஷயங்களுக்காக செலவிடப்பட்டிருந்த அமெரிக்கர்களின் வரிப்பணம் நிறுத்தப்பட்டுள்ளது" என ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.

அந்த பதிவில் பல நாடுகளுக்கு பல விஷயங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதி பட்டியலிடப்பட்டிருந்தது. அதில் இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வழங்கப்படும் 21 மில்லியன் டாலரையும் சேர்த்திருந்தனர்.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த முதல்நாளே இதுகுறித்த அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்தார். எலான் மஸ்க் தலைமையிலான இந்த துறை, வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டில் பல துறைகளில் ஆள்குறைப்பு செய்துள்ளது, செலவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்க அதிபர், இந்திய பிரதமரை சந்தித்த சில நாள்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேப்போல, அமெரிக்காவிலிருந்து அழைத்துவரப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கிடுவது குறித்தும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்தபோதும் அங்கிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நிதி ரத்து செய்யப்படுவது குறித்து பாஜக தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில், "வாக்களர்களை அதிகரிக்க 21 மில்லியன் டாலர்கள்? இது இந்தியாவின் தேர்தல் நடைமுறையில் வெளிநாடு தலையிடுவதாகும். இதனால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஆளும் கட்சிக்கு அல்ல" எனப் பதிவிட்டிருந்தார்.

Modi - Trump

DOGE அமெரிக்காவால் வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள் நிறுத்தப் பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா, வங்காளதேசம், நேபால், மொசாம்பிக், லிபேரியா, மாலி,செர்பியா, செக் குடியரசு, மால்டோவா, எகிப்து, தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளும் அடங்கும்.

அமெரிக்க பயணத்தின்போது எலான் மஸ்கை சந்தித்த மோடி, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, புதுமைகளை உருவக்கும் அமெரிக்க, இந்திய நிறுவனங்கள் இணைந்து செயல்படுதல், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவு, அரசு நிர்வாகம் என பல விஷயங்களைக் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க

வம்பிழுத்த அண்ணாமலை - உலக டிரெண்டிங்கில் GET OUT MODI | Delhi CM | Udhayanidhi DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Delhi CM - மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி? * டெல்லி முதல்வர் பதவியேற்பு!* Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்... மேலும் பார்க்க