செய்திகள் :

Israel: கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட நெதன்யாகு - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

post image

இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன.

அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்தாரும், எகிப்தும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கிடையில், கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் இஸ்ரேல் மீது உலக நாடுகளின் கண்டனத்தை தீவிரப்படுத்தியது. இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, கத்தார் ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்ய மறுத்து வருகிறது.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

அதைத் தொடர்ந்து நடந்த ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உலக நாடுகள் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் எதிர்த்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன.

மேலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா-வில் உரையாற்றும்போதும், உலக நாடுகளின் தலைவர்கள் நெதன்யாகுவைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியிடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.

நெதன்யாகு
நெதன்யாகு

அப்போது, செப்டம்பர் 9-ம் தேதி தோஹாவில் நடந்த தாக்குதலில் கத்தாரின் இறையாண்மையை மீறியதற்காக அல் தானியிடம் நெதன்யாகு மன்னிப்பு கேட்டதாகவும், தாக்குதலில் ஒரு கத்தார் பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதற்குமான சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான், நெதன்யாகு ட்ரம்பை சந்தித்திருக்கிறார். எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அடிப்படையில் இந்த மன்னிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்ன?

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க

அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!

இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம். செப்டம்பர் 3 - ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12... மேலும் பார்க்க

தவெக விஜய்: "நம்மால் நடந்துவிட்டதென்ற குற்ற உணர்ச்சியால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்" - ஆ.ராசா MP

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து பெருந்துயரம் ஏற்பட்டது.கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் ஸ்டாலின் மு... மேலும் பார்க்க