பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு
Kanmani: 'இனி எங்கள் பயணம் இந்த செல்லக்குட்டியுடன்..!' - குழந்தை பிறந்ததை அறிவித்த கண்மணி - அஷ்வத்
சின்னத்திரை நடிகை கண்மணிக்கும் - தொகுப்பாளர் அஷ்வத்துக்கும் குழந்தை பிறந்திருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.

அந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா, உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கண்மணி- அஷ்வத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர்.
அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், " நாங்கள் இருவரும் இணைந்து ஒரு காதல் கதையை எழுதினோம். வாழ்க்கை எங்களுக்கு அந்த காதல் கதையின் தொடர்ச்சியை அருளி ஆச்சர்யப்படுத்திருயிருக்கிறது. இனி எங்களின் பயணம் இந்த செல்லக்குட்டியுடன் சுவாரஸ்யமானதாக இருக்கப்போகிறது.” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வாழ்த்துகள் கண்மணி- அஷ்வத்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...