செய்திகள் :

Kanmani: 'இனி எங்கள் பயணம் இந்த செல்லக்குட்டியுடன்..!' - குழந்தை பிறந்ததை அறிவித்த கண்மணி - அஷ்வத்

post image

சின்னத்திரை நடிகை கண்மணிக்கும் - தொகுப்பாளர் அஷ்வத்துக்கும் குழந்தை பிறந்திருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.

அந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா, உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கண்மணி- அஷ்வத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர்.

அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், " நாங்கள் இருவரும் இணைந்து ஒரு காதல் கதையை எழுதினோம். வாழ்க்கை எங்களுக்கு அந்த காதல் கதையின் தொடர்ச்சியை அருளி ஆச்சர்யப்படுத்திருயிருக்கிறது. இனி எங்களின் பயணம் இந்த செல்லக்குட்டியுடன் சுவாரஸ்யமானதாக இருக்கப்போகிறது.” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

வாழ்த்துகள் கண்மணி- அஷ்வத்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Sindhu Bhairavi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் இன்ஸ்டா வீடியோ; மௌனம் காக்கும் ஆர்த்தி; பின்னணி என்ன?

சீரியல்நடிகர், நடிகைகளிடையேகாதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஜோடி சேர்வது தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் வழக்கமாகநடக்கிற ஒன்றுதான். சேத்தன் - தேவதர்ஷினி, போஸ் வெங்கட் - சோனியா, ராஜ்கமல் - லதா ரா... மேலும் பார்க்க

Saregamapa: ``தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' - `சரிகமப' அபினேஷ்

'சரிகமப' லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 முடிவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார். திவினேஷைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 6 நபர்... மேலும் பார்க்க

`இன்னைக்கு நடுரோட்டுல இருக்கேன்' - சீல் வைக்கப்பட்ட வீடு; கலங்கும் நடிகர் ராஜசேகர் மனைவி தாரா

`நிழல்கள்' படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜசேகர். சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவிலிருந்து விலகிய பிறகு டிவியில் `சரவணன் மீனாட்சி' முதலான சில சீரியல்களில் நடித்தார்.கடந்த சில ஆண்ட... மேலும் பார்க்க

இப்பவும் மீடியாதான் வாழ்க்கை | 'நேருக்கு நேர்' வீரபாண்டியன் | இப்ப என்ன பண்றாங்க பகுதி 10

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.இப்போது மேக் அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள்.‘இப... மேலும் பார்க்க