செய்திகள் :

Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்ன சொல்கிறார்?

post image

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதற்கு முன்பு, முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மரணமடைந்த சமயத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். என்னுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை விடுகின்றனர். அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், நான் சொல்ல மாட்டேன்" என கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோஷமிட்ட விநாயகன்

இந்த நிலையில் சி.பி.எம் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு உடை அணிந்து 'இங்குலாப் சிந்தபாத்' என கோஷமிடும் வீடியோ வைரலானது.

உம்மன் சாண்டி மறைவை மட்டும் விமர்சித்ததாக விநாயகனை காங்கிரஸ் கட்சியினர் கண்டித்து கருத்துகளை வெளியிட்டனர்.

விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

நடிகர் விநாயகன்

அதில், "என் தந்தையும் இறந்துவிட்டார், சகாவு வி.எஸ்.அச்சுதானந்தனும் இறந்துவிட்டார். காந்தியும் இறந்துவிட்டார், நேருவும் இறந்துவிட்டார், இந்திராவும் இறந்துவிட்டார், ராஜிவ் காந்தியும் இறந்துவிட்டார், கருணாகரனும் இறந்துவிட்டார். ஹைபி ஈடனின் தந்தை ஜார்ஜ் ஈடனும் இறந்துவிட்டார். உங்கள் தாயின் நாயர் சாண்டி என்றால் அவரும் இறந்துவிட்டார். இறந்துவிட்டனர், இறந்துவிட்டனர்..." என பதிவிட்டதுடன் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நடிகர் விநாயகனின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.கங்கைகொண்ட சோழப... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பி... மேலும் பார்க்க

``காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது என் தவறுதான்'' - ராகுல் காந்தி சொல்வதென்ன?

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தனது தவறுதான் என்றும் கட்சியின் தவறில்லை என்றும் கூறியுளார். மேலும், தற்போது சாதிவாரி கணக்க... மேலும் பார்க்க

Thailand vs Cambodia: இந்து கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதுதான் மோதலுக்கு காரணமா? | Explained

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள மோதலால் தென் கிழக்கு ஆசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்னைகள் திடீரென மோதலாக வெடித்திருக்கிறத... மேலும் பார்க்க

``கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. மதுரைக்கு அவப்பெயரை தந்துள்ளது திமுக அரசு..'' - அதிமுக டாக்டர் சரவணன்

தமிழ்நாட்டின் கலை, கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2023 (Swachh Survekshan 2023) தூய்மைப் பட்டியல... மேலும் பார்க்க