செய்திகள் :

Kerala: பயணிகளை ஏற்றிச்சென்றதாக ஆட்டோ டிரைவர் அடித்து கொலை? தனியார் பஸ் ஊழியர்கள் மூவரிடம் விசாரணை

post image

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாணூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(49). இவர் தனியார் பஸ்ஸுக்கு முன்னால் ஆட்டோவில் சென்று பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணிகளை ஏற்றிச் சென்றதாக கோடூர் பகுதியில் வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் அப்துல் லத்தீப்பைத் தாக்கினர். அதில் காயம் அடைந்த அப்துல் லத்தீப் தனது ஆட்டோவிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்காகச் சென்றுள்ளார்.

ஆட்டோ

மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கிய அப்துல் லத்தீப் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

திரூர் - மஞ்சேரி ரூட்டில் ஓடும் தனியார் பஸ் ஊழியர்கள் சேர்ந்து ஆட்டோ டிரைவர் அப்துல் லத்தீப்பைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ் ஊழியர்கள் 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ஆட்டோ டிரைவர் அப்துல் லத்தீப்

ஒதுக்குங்கல் ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த அப்துல் லத்தீப்புக்கு ஆதரவாக அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், "பயணிகள் கை காட்டினால் நிறுத்தலாம் என்ற சட்டம் ஆட்டோ டிரைவர்களுக்கு உண்டு. பத்து ரூபாய்க்காக நாங்கள் ஆட்டோவை நிறுத்துகிறோம். அதற்காக இப்படி அடித்து கொலை செய்யலாமா? இந்த வழக்கில் இறந்த ஆட்டோ டிரைவரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு..'' - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இட... மேலும் பார்க்க

விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில்... மேலும் பார்க்க

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ள... மேலும் பார்க்க

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க