செய்திகள் :

Maargan: 'அந்தக் கதையைக் கேட்டு அழுதேன்' - மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பேசியது என்ன?

post image

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று ( ஜூலை 1) நடைபெற்றது.

இதில் பேசிய விஜய் ஆண்டனி, “ நிறைய வெற்றி படங்கள், தோல்வி படங்களைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

மார்கன்
மார்கன்

எந்த ஒரு படமும் ஹீரோவால் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட ஓடாது. இயக்குநரின் இயக்கமும், எழுத்தும் உறுதியாக இல்லையென்றால் படம் ஓடாது.

இவை இரண்டும் சரியாக இருந்தால்தான் படம் ஓடும். அதனால் நான் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கான அங்கீகாரத்தை இயக்குநருக்குதான் கொடுப்பேன்.

இந்தப் படம் ஓடியதற்கு முழு முதற்காரணம் என்னுடைய இயக்குநர் லியோ ஜான் தான்.

அவருடைய வேலைக்கு உண்மையாக இருந்திருக்கிறார். ஒரு இயக்குநராகவும், எடிட்டராகவும் உண்மையாக இருப்பார். இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி ” என்று கூறியிருக்கிறார்.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

தொடர்ந்து பேசிய அவர், “ இதற்கு முன் நான் எவ்வளவு படம் நடித்திருந்தாலும் சரி, இனிமேல் எவ்வளவு படங்கள் நடித்தாலும் சரி ‘பிச்சைகாரன்-1’ படத்திற்கு சமமாக எந்தப் படமும் இருக்க முடியாது.

சசி சார் அந்தக் கதையைச் சொல்லி முடித்தப் பிறகு அழுதேன்.  இதுவரைக்கும் யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை அடுத்தப் படத்தில் சசி சார் சொல்லி இருக்கிறார். அந்தப் படத்தில் சசி சாருடன் நான் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அடுத்ததாக ‘சக்தி திருமகன்’ வெளியாக இருக்கிறது. தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Maargan: 'திரைப்படம் முழுவதும் நம்மை த்ரில்லருக்குள் அழைத்து செல்கிறது'- கார்த்திக் சுப்புராஜ்

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி இருக்கிறார். இது... மேலும் பார்க்க

Maargan: 'தயவு செய்து ஒரு படத்தை கொல்கின்ற மாதிரி விமர்சனம் செய்துடாதீங்க'- இயக்குநர் சுசீந்திரன்

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'.இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 1) நடைபெற... மேலும் பார்க்க

Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள் பரபர அப்டேட்

தனுஷுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ்,தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் ஓடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் 'குபேரா' திரைக்கு வந்தது. பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் 'தேரே இஷ்க் மெய்ன்' ப... மேலும் பார்க்க

Desingu Raja 2: ``விஜயகாந்துக்குப் பிறகு வெள்ளந்தியாகப் பேசக்கூடியவர்..." - ஆர்.பி உதயகுமார்

இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் - நடிகை பிந்து மாதவி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் தேசிங்கு ராஜா. காமெடி கலாட்டா படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குந... மேலும் பார்க்க

Desinguraja 2 : ``உன்னையெல்லாம் யார்டா வில்லனா போட்டது என எழில் சார் திட்டினார்" - ரவி மரியா

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்கிய இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் படம் தேசிங்கு ராஜா-2. ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ... மேலும் பார்க்க

குட் டே விமர்சனம் : ஓர் இரவின் கலவரமும், அதனுள் மறைந்திருக்கும் மனிதத்தின் பயணமும்

திருப்பூரின் பரபரப்பான ஜவுளித் தொழிற்சாலையில், சூப்பர்வைசராக இருக்கிறார் சாந்தகுமார் (பிருத்விராஜ் ராமலிங்கம்). அவரது மோசமான ஒரு நாளில், பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், தொலைபேசியில் மனைவியின்... மேலும் பார்க்க