செய்திகள் :

Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார் பெரியசாமி

post image
`அமரன்' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அதுமட்டுமின்றி, `அமரன்' திரைப்படத்திற்குப் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

தற்போது இத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மணி ரத்னத்தை சந்தித்து அவர் குறித்தான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார். தனது பதிவில், `` அமரன் திரைப்படத்தின் 100-வது நாளை நோக்கி....சினிமா குறித்து கனவு காண்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான் மணி சார். நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த முதல் நபர் நீங்கள்தான்.

Rajkumar Periasamy - Mani Ratnam

அந்தப் புகைப்படத்தை 2005-ல் எடுத்திருந்தேன். அந்தப் புகைப்படத்தை நான் தொலைத்துவிட்டேன். உங்களுடன் இந்த இரண்டு புகைப்படங்களை எடுப்பதற்கு தைரியத்தை வரவழைக்க இரண்டு தசாப்தங்கள் & இரண்டு திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. உங்களின் திரைப்பட போஸ்டர்களை பார்த்து வியந்து நின்றவன் இன்று உங்கள் அருகில் நிற்கிறேன். அதுவும் பேச்சற்று நிற்கிறேன். அமரன் திரைப்படம் குறித்து பாராட்டியதற்கு நன்றி சார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

Netflix 2025: `Binge வாட்சுக்கு ரெடியா?' - இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் படைப்புகள்

ஓ.டி.டி தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு ஓ.டி.டி-யில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 54 .73 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரிஜினல் கன்டென்ட... மேலும் பார்க்க

``எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர், வருத்தமா இருக்கு" - புஷ்பலதா மறைவிற்கு கார்த்தி இரங்கல்

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று (பிப்ரவரி 4) காலமானார்.தமிழில் ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான புஷ்பலதா 'யாருக்கு சொ... மேலும் பார்க்க

`நடிகர் ராஜனுடனான காதல்’ - மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா நினைவுகள் பகிரும் எஸ்.பி.முத்துராமன்

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். தமிழில் 'கொங்கு நாட்டு தங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே தெலுங்கில் சில படங்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.சென்னையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 87.எம்.ஜி. ஆர், சிவ... மேலும் பார்க்க

Parvati Nair: `அன்று பேசத் தொடங்கினோம்' - தொழிலதிபரை மணக்கும் பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.பார்வதி நாயர் தமிழில் ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது நிச்சயதார்த்தப் புகைப்... மேலும் பார்க்க