செய்திகள் :

Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார் பெரியசாமி

post image
`அமரன்' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அதுமட்டுமின்றி, `அமரன்' திரைப்படத்திற்குப் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

தற்போது இத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மணி ரத்னத்தை சந்தித்து அவர் குறித்தான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார். தனது பதிவில், `` அமரன் திரைப்படத்தின் 100-வது நாளை நோக்கி....சினிமா குறித்து கனவு காண்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான் மணி சார். நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த முதல் நபர் நீங்கள்தான்.

Rajkumar Periasamy - Mani Ratnam

அந்தப் புகைப்படத்தை 2005-ல் எடுத்திருந்தேன். அந்தப் புகைப்படத்தை நான் தொலைத்துவிட்டேன். உங்களுடன் இந்த இரண்டு புகைப்படங்களை எடுப்பதற்கு தைரியத்தை வரவழைக்க இரண்டு தசாப்தங்கள் & இரண்டு திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. உங்களின் திரைப்பட போஸ்டர்களை பார்த்து வியந்து நின்றவன் இன்று உங்கள் அருகில் நிற்கிறேன். அதுவும் பேச்சற்று நிற்கிறேன். அமரன் திரைப்படம் குறித்து பாராட்டியதற்கு நன்றி சார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

BADGIRL: விருது வென்ற வெற்றிமாறன் உதவியாளர் படம்; திரைப்பட விழாவில் கவன ஈர்ப்பு!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் `பேட் கேர்ள்' திரைப்படம் இந்தாண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அங்கு இ... மேலும் பார்க்க

``விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல" - சுசீந்திரன்

"2K லவ் ஸ்டோரி படத்துல ஒரு தனித்துவமான க்ளைமாக்ஸ் காட்சி இருக்கு. எப்படி 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துல அந்த பசங்க வாழ்கையோட கதை பயணிக்குமோ அதே மாதிரி தான் இந்தப் படத்துலயும் பசங்க வாழ்க்கைகூடவே பயணம... மேலும் பார்க்க

Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் 'அமரன்'.ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ம... மேலும் பார்க்க

ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை... காரணம் என்ன?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் காஞ்சனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடா என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்தர் போன்ற முன... மேலும் பார்க்க

``என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' - நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்!

சின்னத்திரையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்.சமீபத்தில் `உப்பு புளி காரம்' வெப் சீரிஸ் மூலம் பல குடும்பங்களுக்கும் ஃபேவரைட்டானவர் தற்போது புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கெட... மேலும் பார்க்க