செய்திகள் :

Mohammed Shami: ஷமி செய்தது பாவமா... இஸ்லாமிய அமைப்பின் தலைவருக்கு எதிராக கிளம்பும் வாதங்கள்!

post image

இஸ்லாம் மத காலண்டரில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலைக்கெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மத வழக்கத்தின்படி நோன்பு இருக்கின்றனர். அதன்படி, தற்போது மார்ச் 1-ம் தேதி முதல் ரமலான் தொடங்கிவிட்டதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், துபாயில் மார்ச் 2-ம் தேதி நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் முகமது ஷமி குளிர்பானம் பருகும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி
மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி

ஷமி செய்தது பாவமா?

இந்த விவகாரத்தில், அனைத்திந்திய முஸ்லீம் ஜமாத்தின் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி, ``புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஒரு கடமை. யாராவது வேண்டுமென்றே நோன்பு இருப்பதைத் தவிர்த்தால் அவர்கள் பாவம் செய்தவராவார். கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இப்போது நோன்பு இருக்கவில்லை. இதன்மூலம் அவர் பாவம் செய்துவிட்டார். ஷரீஅத்தின் படி ஷமி பாவி, குற்றவாளி" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, ஷமியின் செயலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சிலர் அவருக்கெதிராக கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கினர். அதேசமயம், `ஷமி நாட்டுக்காக விளையாடுகிறார். பயணத்தில் இருப்பவர்கள் நோன்பு இருப்பதைத் தவிர்க்கலாம். அதில் தவறில்லை என்று இஸ்லாம் கூறுகிறது' என ஷமிக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஷமியை விமர்சித்த மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வியைப் போல இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஷமியின் செயலில் தவறில்லை என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

முகமது ஷமி
முகமது ஷமி

`சுற்றுப்பயணத்தில் இருப்பதால்...’

ஊடகத்திடம் பேசிய அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபிராங்கி மஹ்லி, ``இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது கட்டாயம் என்றாலும், பயணத்தில் இருப்பர்வகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது ஷமியைப் பொறுத்தவரை, அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், நோன்பைத் தவிர்க்க அவருக்கு சாய்ஸ் இருக்கிறது. எனவே, அவரைக் கேள்விகேட்க யாருக்கும் உரிமை இல்லை." என்று கூறினார்.

இவரைப்போலவே, ஷியா மதகுரு மௌலானா யாசூப் அப்பாஸ், ``இதுவொரு மலிவான விளம்பரம். ஷமியின் தனிப்பட்ட விருப்பத்தை பொதுப் பிரச்னையாக மாற்றக் கூடாது." என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லியின் மோதி மசூதியின் இமாம் மௌலானா அர்ஷாத், ``ஷமியைக் கேள்வி கேட்பவர்களுக்கு இஸ்லாமோ, குரானோ புரியவில்லை. ஒரு பயணி நோன்பைத் தவிர்க்க இஸ்லாம் அனுமதிக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்.

நோன்பு
நோன்பு

அதேபோல, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார், ``நாட்டுக்காக விளையாடும்போது, நோன்பு இருப்பது ஆட்டத்தில் தனது செயல்திறனைப் பாதிக்கும் என்று ஷமி உணர்ந்தால், அவரால் தூங்கவே முடியாது. அவர், இந்திய அணியைப் பலமுறை வெற்றிபெறச் செய்தவர். எனவே, விளையாட்டில் மதம் கூடாது. இன்று நீங்கள் எந்தவொரு இஸ்லாமியரிடம் கேட்டாலும், ஷமியை நினைத்துப் பெருமைப்படுவதாக அவர் கூறுவார்." என்று ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma Speech: ``இந்த அணி என்னை நம்புகிறது"- நெகிழ்ந்த ரோஹித்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

IND vs NZ: ``ஒரு அணியாக நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்'' - கே.எல்.ராகுல்

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. ரோகித் சர்மா2013க்குப் பிறகு மீண்டும் இந்திய... மேலும் பார்க்க

IND vs NZ: ``கே.எல். ராகுல் ஆடுவதைப் போன்ற ஷாட்களை வேறு யாராலும் ஆட முடியுமா!'' - ஹர்திக் பாண்டியா

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. Rohit SharmaIND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந... மேலும் பார்க்க

Virat Kohli : ``நண்பர் வில்லியம்சனை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது; ஆனாலும்..." - கோலி நெகிழ்ச்சி

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை

'தோனியின் அரியணையில் ரோஹித்!'சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணி வென்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெல்லும் இரண்டாவது ஐ.சி.சி கோப்பை இது. ... மேலும் பார்க்க