செய்திகள் :

Nitish Rana: "DC-க்கெதிரான சூப்பர் ஓவரில் ஏன் களமிறங்கவில்லை" - நிதிஷ் ராணா விளக்கம்!

post image

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற டெல்லி Vs ராஜஸ்தான் போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரங்களுடனும் நல்ல நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 9 ரன்கள் மேட்டுமே தேவைப்பட ஹெட்மயரும், துருவ் ஜோரலும் களத்தில் இருந்தனர்.

ஸ்டார்க்
ஸ்டார்க்

இருப்பினும், கடைசி ஓவரில் ஸ்டார்க் யார்க்கர்களாக வீசி 7 ரன்களை மட்டும் கொடுத்து போட்டியை டிரா செய்தார். அடுத்து சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு, ஹெட்மயரும், ரியான் பராக்கும் இறங்கினர். அப்போதே, இப்போட்டியில் 28 பந்துகளில் 51 ரன்கள் அடித்த நிதிஷ் ராணாவை ஏன் இறக்கவில்லை எனக் கேள்வியெழுந்தது. இறுதியில், ஸ்டார்க் வீசிய சூப்பர் ஓவரில் ஒரேயொரு பவுண்டரியுடன் ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் குவித்ததது ராஜஸ்தான். அதைத் தொடர்ந்து, டெல்லி அணியில் இறங்கிய கே.எல்.ராகுலும், ஸ்டப்ஸும், சந்தீப் சர்மா வீசிய முதல் 4 பந்துகளிலேயே 13 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்தனர்.

கை மேல் இருந்த இருந்த வெற்றியை ராஜஸ்தான் டிராவுக்கு கொண்டு, தோற்றதற்கு, நிதிஷ் ராணாவை சூப்பர் ஓவரில் இறக்காதது முக்கிய காரணம் என்று பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், சூப்பர் ஓவரில் களமிறக்கப்படாதது குறித்து நிதிஷ் ராணா பேசியிருக்கிறார்.

நிதிஷ் ராணா
நிதிஷ் ராணா

போட்டிக்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நிதிஷ் ராணா, "இது ஒருவர் எடுத்த முடிவல்ல, அணி நிர்வாகம் எடுத்த முடிவு. ஒருவேளை, ஹெட்மயர் 2 சிக்ஸர்கள் அடித்திருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். அதுதான் என்னுடைய பதில். ஹெட்மயர் எங்கள் ஃபினிஷர், இது எல்லோருக்கும் தெரியும். இதற்கு முன்பு அதை நிரூபித்திருக்கிறார். இது போன்ற முடிவுகளை ஒருவர் எடுப்பதில்லை. இதில் விவாதிக்க அணி நிர்வாகம் இருக்கிறது. ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்திருந்தால், உங்களின் கேள்வி வேறுவிதமாக இருந்திருக்கும். கிரிக்கெட் என்பது ஒரு முடிவு சார்ந்த விளையாட்டு" என்று கூறினார்.

Preity Zinta: ``19 வயது வீரராக முதல் சந்திப்பு; இன்றுவரை ரசிகை..'' - சஹல் குறித்து ப்ரீத்தி ஜிந்தா

IPL, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹலை முதன்முறையாக சந்தித்தது பற்றி மனம் நெகிழும் வகையில் பகிர்ந்துள்ளார்.எப்போதுமே சஹலின் ரசிகை... மேலும் பார்க்க

Rohit Sharma : '6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே...' - எப்போதான் ரன் அடிப்பீங்க ஹிட் மேன்?

'தடுமாறும் ரோஹித்!'மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இப்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த அணியின் முக்கிய வீரரான ... மேலும் பார்க்க

MI vs SRH : 'ஸ்டம்புக்கு முன்னே கையை விட்ட கீப்பர் க்ளாசென்' - வினோத `No Ball' கொடுத்த நடுவர்

'மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நடுவர் கொஞ்சம் வித்தியாசமான பிழைக்காக ந... மேலும் பார்க்க

Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை இதுவரை வென்ற 9 இந்தியர்களில் மோஹித் சர்மாவும் ஒருவர். 2013-ல் சி.எஸ்.கே அணியில் தனது பயணத்தைத் தொடங்கிய மோஹ... மேலும் பார்க்க

Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை இழந்த ராஜஸ்தான்

'யார்க்கரின் பலன்!' 'ஒரு பௌலர் சரியாக குறிவைத்து நல்ல யார்க்கரை வீசினால் என்னாலும் அதை அடிக்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பௌலரால் எப்போதுமே துல்லியமான யார்க்கர்களை வீச முடியாது. அவர்கள் தவறுவிடும்போது ... மேலும் பார்க்க

Chahal : `அவனுக்கு பயமில்ல அதுதான் அவன் பலம்' சஹாலை அதிகம் கொண்டாட வேண்டும்' - ஏன் தெரியுமா?

'பஞ்சாபின் அசாதாரண வெற்றி!'ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த டிஃபண்டை செய்து காண்பித்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். யுஸ்வேந்திர சஹாலின் ஆகச்சிறந்த பௌலிங்கினால் மட்டுமே பஞ்சாப் அணியால் இதை சாத்திக்க முடிந... மேலும் பார்க்க