செய்திகள் :

PMK: ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு; 'நோ' அன்புமணி; காந்திமதி பிரசன்ட் - என்ன நடக்கிறது?

post image

இன்று திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.

கடந்த வாரம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லாபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் மேடையில் ராமதாஸிற்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் அதில் பங்கேற்கவில்லை.

மேலும், அந்தக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

காந்திமதி
காந்திமதி

'நோ' அன்புமணி

இந்த நிலையில் தான், இன்று சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வருகிறார் ராமதாஸ்.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் ராமதாஸின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.

'மூச்சிருக்கும் வரை நானே தலைவராக தொடர்வேன்' என்று முன்னர் ராமதாஸ் சொன்னதற்கு ஏற்ப அடையாள அட்டையில் அவர் புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது.

மேடையில் காந்திமதி!

அடுத்ததாக, கூட்டத்தின் மேடையில் ராமதாஸின் அருகில் அவரது மகள் காந்திமதி அமர்ந்திருக்கிறார்.

காந்திமதியின் மகனான முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டதில் தான் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே மோதல்போக்கு தொடங்கியது.

இதையடுத்து, ஒரு கட்டத்தில் முகுந்தன் அந்தப் பதவியில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு, ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டங்களில் அடிக்கடி காந்திமதி வருவது அல்லது அவரது பெயர் அடிப்படுவது நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் காந்திமதிக்கு எதாவது பதவி அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? - தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நா... மேலும் பார்க்க

CPI: புதிய மாநிலச் செயலாளர் தேர்வு? முத்தரசன் மாற்றப்படுவாரா? - பரபரக்கும் சேலம் மாநாடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாநிலச் செயலாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இவ்விவகாரம் குறித்து... மேலும் பார்க்க

"மலிவான அரசியல் செய்கிறார்; ஆளுநர் இங்கேயே இருக்கட்டும்..!" - முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொ... மேலும் பார்க்க

RSS: ``இந்தியாவின் தாலிபன் போன்றது ஆர்.எஸ்.எஸ்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமரசனம்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழ... மேலும் பார்க்க

PMK: 'எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்; ஆனால்...' - ராமதாஸ்

திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளைக் கொண்டாட தைலாபுரம் சென்றிருந்தார் அன்புமணி. அப்போது, அங்கே ராமதாஸையும் ... மேலும் பார்க்க

'வேலை செய்றப்போ சுத்தி சுத்தி வருவாங்க...' - Sanitary Workers Opens Up | Vikatan

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ... மேலும் பார்க்க