செய்திகள் :

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

post image

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அரசு சார்பிலும், மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் சின்னசாமி ஸ்டேடியத்திலும் ஆர்.சி.பி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால், இரண்டு இடங்களிலும் ரசிகர்கள் அதிகளவில் கூடினர். குறிப்பாக, ஸ்டேடியதுக்கு வெளியே மிகப்பெரும் அளவில் ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

RCB வெற்றிக் கொண்டாட்டம்
RCB வெற்றிக் கொண்டாட்டம்

முறையான திட்டமிடல், முன்னேற்பாடுகள் இன்றி அவசரமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதே இத்தகைய துயர சம்பவத்துக்கு காரணம் என அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

அரசோ, லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்காததால் இவ்வளவு பெரிய கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணிக்கு முதல்முறையாக உலகக் கோப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம் என வலியுறுத்தியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்துப் பேசிய கபில் தேவ், "அதைப் பற்றி மிகவும் மோசமாக உணர்கிறேன். இதிலிருந்து ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

கபில்தேவ்
கபில்தேவ்

அடுத்த முறை வெற்றிக் கொண்டாட்டம் நடக்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தவறு செய்கிறார்கள்.

ஆனால், அந்தத் தவறுகள் வாழ்க்கையை இழக்குமளவுக்கு இருக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் எந்த அணி வென்றாலும் அமைதியாக இருங்கள்.

கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியமானது. அப்படியே இருப்போம்." என்று கூறினார்.

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்..." - நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை,... மேலும் பார்க்க

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க