செய்திகள் :

RCB vs PBKS Final: அந்த அணி கோப்பை வெல்லவே அதிக வாய்ப்பு; உறுதியாகக் கூறும் ChatGPT, Grok, Gemini

post image

ஐபிஎல் வரலாற்றில் 17 சீசன்களாகக் கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ஒரு அணி முதல்முறையாகக் கோப்பை ஏந்தப்போகிறது.

2014 பிறகு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பஞ்சாப்பும், 2016-க்குப் பிறகு ரஜத் பட்டிதார் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் பெங்களூருவும் அகமதாபாத்தில் தங்களின் கோப்பை கனவை நிறைவேற்ற இன்று (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

PBKS vs RCB - IPL 2025 Final
PBKS vs RCB - IPL 2025 Final

எந்த அணி கோப்பை வென்றாலும் அது எமோஷனல் மொமென்ட் என்பதால் ஆர்.சி.பி, பஞ்சாப் ரசிகர்களைக் கடந்து மற்ற ஐ.பி.எல் ரசிகர்கள் எந்த அணியை சப்போர்ட் செய்வதென்றறியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், எக்ஸ் க்ரோக் (X - Grok), ஜெமினி (Gemini), சாட்ஜிபிடி (ChatGPT) ஆகிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தளங்கள், இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பை வெல்லும் என்று கணித்திருக்கின்றன.

X - Grok:

கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் ஆர்.சி.பி வெல்ல சற்று கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.

ஜோஷ் ஹேசில்வுட் (11 போட்டிகளில் 21 விக்கெட்டுகள்), சுயாஷ் சர்மா தலைமையிலான ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது.

அதேபோல், விராட் கோலி (55.81 சராசரியில் 614 ரன்கள்), பில் சால்ட்டின் அபாரமான ஃபார்ம் என அவர்களின் பேட்டிங் சிறந்த நிலையில் உள்ளது.

RCB
RCB

அகமதாபாத்தில் ஆர்.சி.பி அணி முதலில் பேட்டிங் செய்த 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றிருக்கிறது.

மேலும், கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் திறன் அவர்களுக்கு கூடுதல் அட்வான்ட்டேஜ்.

டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் போன்றோர் ஆர்.சி.பி-யை ஆதரித்திருக்கின்றனர். இறுதிப்போட்டியில் ஹேசில்வுட்டை ஆட்ட நாயகனாக இருப்பார் என்று வார்னர் கணித்துள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

இருப்பினும், குவாலிஃபயர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 203 ரன்களை, ஸ்ரேயஸ் ஐயரின் 87 ரன்கள் நாட்அவுட் இன்னிங்ஸால் பஞ்சாப் சேஸ் செய்தது அவர்களின் மீண்டெழும் தன்மையை வெளிப்படுத்தியது.

கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சஹல் அடங்கிய பவுலிங் யூனிட் அபாரமாக இருக்கிறது.

எனினும், ஆர்.சி.பி அணியின் தற்போதைய ஃபார்ம், சமநிலை மற்றும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, இறுதிப் போட்டியில் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று நான் கணிக்கிறேன்.

பெரிய போட்டிகளில் ஆர்.சி.பி-யின் அனுபவம் அவர்களை சாம்பியன்களாக மாற்றும்.

Gemini:

இந்த சீசனில் சமீபத்திய போட்டிகள், குவாலிஃபயர் 1 அடிப்படையில் ஆர்.சி.பி அணி சற்று முன்னிலை பெற்றிருக்கிறது.

ஆனாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் மீண்டெழும் திறனைக் காட்டியிருக்கிறது. எந்த அணிக்கும் சவாலளிக்கும் பேட்டிங் பவரைக் பஞ்சாப் கொண்டுள்ளது.

எனவே, இறுதிப்போட்டியில் அவரவர்களின் செயல்திறனைப் பொறுத்தே முடிவு அமையும்.

Kohli
Kohli

மேலும், டாஸ், வானிலை போன்ற காரணிகளும் முடிவுகளில் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.

இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்று சொல்வது கடினம். ஏனெனில், இரு அணிகளுமே தங்களின் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வலுவான காரணங்களைக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், இரு அணிகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் கட்டாயம் ஏற்பட்டால் நான் கொஞ்சம் ஆர்.சி.பி பக்கம் செல்வேன்.

PBKS vs RCB
PBKS vs RCB

ChatGPT:

ஆர்.சி.பி அணியின் ஃபார்ம், இந்த சீசனில் பஞ்சாப்புக்கெதிரான போட்டிகளில் பெற்ற வெற்றிகள், குறிப்பாக குவாலிஃபயர் 1-ல் அவர்களின் உறுதியான வெற்றி ஆகியவற்றால் இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி-யே என் முதல் விருப்பமாக இருக்கிறது.

இருப்பினும், பஞ்சாப்பின் சமீபத்திய செயல்திறன், ஸ்ரேயஸ் ஐயரின் கேப்டன்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவகையில் ஆர்.சி.பி-க்கு சவாலளிக்கும்.

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க