செய்திகள் :

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்..." - நெகிழும் ரோஹித்

post image

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.

தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ரோஹித், 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியாவுக்கு வென்றுகொடுத்தார்.

ரோஹித் மற்றும் இந்திய வீரர்கள்
ரோஹித் மற்றும் இந்திய வீரர்கள்

இருப்பினும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் இந்தியா மோசமாகத் தோல்வியடைந்ததாலும், அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனதாலும் எழுந்த கடும் விமர்சனங்களால், ஐ.பி.எல்லின்போதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவிருக்கிறார். இந்த நிலையில், தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் பிடிக்குமென்றும், தான் அதிலிருந்து ஓய்வுபெற்றது அவருக்கு அது ஏமாற்றமளித்ததாகவும் ரோஹித் கூறியிருக்கிறார்.

செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, 'தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்' புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ரோஹித், "என் அப்பா ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்களின் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்கள் செய்தார்.

அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர். அவருக்கு இந்த மாடர்ன் டே கிரிக்கெட் பிடிக்காது.

ரோஹித்
ரோஹித்

எனக்கு இன்னும் நியாபகமிருக்கிறது, ஒருநாள் போட்டியில் நான் 264 ரன்கள் அடித்த போது, ஓகே நன்றாக விளையாடினாய் என்றுதான் அவர் இருந்தார். அதைத்தாண்டி அவரிடம் எந்த உற்சாகமும் இல்லை.

ஆனால், டெஸ்ட் போட்டியில் 30 அல்லது 40 அல்லது 50 ரன்கள் அடித்தால் விரிவாகப் பேசுவார். அப்படித்தான் கிரிக்கெட்டை அவர் நேசித்தார்.

முதலில் நீங்கள் பள்ளியில் கிரிக்கெட் விளையாட வேண்டும். பிறகு 19 வயத்துக்குட்பட்டோர் போட்டி, ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி டிராபி, இந்தியா ஏ அணியில் விளையாட வேண்டும். இவையனைத்தையும் நான் செய்திருக்கிறேன்.

ரோஹித் - புஜாரா
ரோஹித் - புஜாரா

இதன் மூலம், நான் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன். என்னுடைய இந்தப் பயணத்தை அவர் பார்த்திருக்கிறார்.

சிவப்பு பந்தில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார். அதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய ஊக்கப்படுத்துவார்

ஆனால், அதிலிருந்து நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.

அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தார். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். அவர் இல்லாமல் இது ஒருபோதும் சாத்தியமில்லை." என்று கூறினார்.

Eng vs Ind: "இங்கிலாந்தில் இது நடந்தால் கோலி மீண்டும் டெஸ்ட்டுக்கு வருவார்" - கிளார்க் கூறுவது என்ன?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்தத் தொடரில், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது யார் என்பதே மிகப்பெரிய எதிர... மேலும் பார்க்க

Kohli: ``அவர் அதை உணர்ந்துவிட்டார்!'' - கோலியின் ஓய்வு குறித்து ஆஸி முன்னாள் கேப்டன்

இந்தியா மட்டுமல்லாது உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் கேப்டன் விராட் கோலி. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத கோலி, கடைசியாக விளையாடிய ... மேலும் பார்க்க

TNPL 2025 - பேட்டிங், பௌலிங்கில் அசத்தல்... திருப்பூரை வீழ்த்திய சேப்பாக்!

திருப்பூர் தமிழன்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிரு... மேலும் பார்க்க

'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி - TNPL 2025

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ... மேலும் பார்க்க

Pujara: ``புஜாராவை எப்படி அவுட்டாக்குவது?'' - சிறுவயது நினைவுகளைப் பகிரும் கேப்டன் ரோஹித்

இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, 'தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (ஜூன் 5... மேலும் பார்க்க

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க