செய்திகள் :

Scholarship: வருஷத்துக்கு ரூ.12,000 டு 20,000 -மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவது எப்படி?

post image

மாநில அரசும், மத்திய அரசும் மாணவர்களுக்கு என நிறைய கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது.

ஆனால் பெரும்பாபாலான மாணவர்களுக்கு இதுப் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லை. சமூக பொருளாதார சூழலால் விளிம்பு நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றிய விழிப்புணர்வோடு இருப்பது கட்டாயம். அந்தவகையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் என்ற கல்வி உதவித் தொகை திட்டத்தை பற்றிய விவரங்கள் இங்கே.

பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் திட்டம்

தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடிக்கும் மாணவர்கள் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் என்ற திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தைப் பொறுத்தவரை வருடத்திற்கு 12,000- முதல் 20,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது. ஏழ்மை காரணமாக மாணவர்/மாணவியரின் உயர்க் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இடஒதுக்கீடு சதவிகிதம், உதவித் தொகை விவரம், விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* 18 முதல் 25 வயதுடைய மாணவ/ மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

* தொலைதூர கல்வி( Distance Education) முறையில் பயின்றவர்கள் ஊக்கத்தொகைக்கு தகுதியில்லை.

* 12ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த(3+2 ஆண்டுகள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

*அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

* இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை நிறுத்தப்படும்.

* கல்லூரி படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டுத் தேர்விலும் 50 சதவிகித மதிப்பெண்ணும் குறைந்தபட்சம் 75 சதவிகித வருகை பதிவேடும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* மத்திய மற்றும் மாநில அரசின் வேறெந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுபவராக இருக்கக் கூடாது.

இடஒதுக்கீடு சதவிகிதம்

* இந்த ஊக்கத்தொகையைப் பொறுத்தவரை மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினத்தவர்களுக்கு 7.5 சதவிகிதமும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரிவுகளின் கீழ் இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் இதர பிரிவினருக்கு வழங்கப்படும்.

உதவித் தொகை விவரம்

* இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா ரூ. 12,000 உதவித்தொகை வழங்கப்படும்.

* முதுகலை பட்டப்படிப்பு தொடர்பவர்களுக்கு தலா ரூ.20,000 உதவித் தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

* ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ.20,000 ஊக்கத்தொகை பெறுவார்கள்.

* பொறியியல் போன்ற 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா ரூ. 12,000 மற்றும் கடைசி ஆண்டுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

* மாணவர் அல்லது மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு நேரடியாக உதவித் தொகை செலுத்தப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

* வருமானச் சான்றிதழ்

* ஆதார் 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

* வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை

விண்ணப்பிக்கும் முறை

* இந்த திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் போன்றவை மத்திய அரசின் டிஜிலாக்கர் மூலமே சரிபார்க்கப்படும்.

* தேசிய உதவித்தொகை வலைதளத்தில் என்ற www.scholarships.gov.in இணைய தளத்தில் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அதனைச் சரியாக கவனித்து நாம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

* தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் மேற்கூறிய www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மதுரை: UPSC / TNPSC குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்.!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் யூ.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் மதுரையில் நடைபெறவுள்ளது. குரூப் தேர்வு வருகின்ற மார்ச் 23... மேலும் பார்க்க

`தோல்விகளைக் கொண்டாடும் அமெரிக்கா' - தமிழ் IAS அதிகாரியின் ஹார்வர்டு அனுபவங்கள்

உலகின் அபாயகரமான நிலவமைப்பையும், தீவிரமான பருவநிலைகளையும் கொண்ட இமயமலை பிராந்தியம், லாகுல் ஸ்பிட்டி இந்தியாவில், லேவுக்கு அடுத்து பெரிய மாவட்டமான லாகுல் ஸ்பிட்டியின் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய முதல... மேலும் பார்க்க

``இப்போது வரை இந்தியில் படிக்கவோ எழுதவோ பேசவோ தெரியாது" - ஆர்.பாலகிருஷ்ணனின் அதிரடி பதிவு

'மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்லும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடையாது' என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தமிழக அரசியல் களத்... மேலும் பார்க்க