செய்திகள் :

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்

post image

நடிகை குறித்து அவதூறாகப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.

சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை 2011-ல் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீமான் இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்பு கோர தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

மேலும் இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சீமான் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்.

சீமான்
சீமான்

"எனது சொல், செயல்களால் நடிகைக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

இனி நடிகை குறித்து அவதூறாகப் பேசமாட்டேன்" என்றும் சீமான் தெரிவித்திருக்கிறார்.

Karur : 'அண்ணனா நினைச்சுக்கோங்க; நேர்ல வரேன்' - கரூர் குடும்பங்களிடம் வீடியோ காலில் அழுத விஜய்

'கரூர் துயரம்!'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை உறுதிப்படுத்திக் கொள்ள கரூர் சம்பவத்தில் உயிரிழந்த... மேலும் பார்க்க

கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குடும்பத்தினரின் இழப்புக்கு ஆறுதல் கூறியதுடன், விஜய் தனிப்பட்ட முறையில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி : 11-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். இவரது உறவினரான 16 வயதான சிறுவன் நாசரேத் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப... மேலும் பார்க்க

சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கருவறை முன்புள்ள துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விலை மதிப்புமிக்க பொருட்களை கோய... மேலும் பார்க்க

Bihar Election: நிதிஷ் தக்க வைப்பாரா? தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பாரா? பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

முடித்த காங்கிரஸ் ஆதிக்கம்.. தொடங்கிய லாலுவின் எழுச்சி!பீகார் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது முதல் 1990 வரை காங்கிரஸ் கட்சியே அந்த மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்த... மேலும் பார்க்க

வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த... மேலும் பார்க்க