செய்திகள் :

சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கருவறை முன்புள்ள துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

விலை மதிப்புமிக்க பொருட்களை கோயில் வளாகத்திலேயே பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தது கேரள ஐகோர்ட். மேலும், அந்தத் தங்க கவசங்கள் சபரிமலைக்குக் கொண்டுவரப்பட்டன.

இதற்கிடையே தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைந்ததாகச் சர்ச்சை எழுந்தது. மேலும், 1999-ம் ஆண்டு விஜய் மல்லையா சபரிமலை கோயிலுக்கு வழங்கிய சுமார் 30 கிலோ தங்கத்தில் கோயிலின் மேல்பகுதிகளிலும், துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களிலும் தங்கம் பதிக்கப்பட்டன.

அதே சமயம் 2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்கம் பதிப்பதற்காக சென்னைக்குக் கொண்டுசென்றார். அப்போது சபரிமலையிலிருந்து கொடுத்தனுப்பப்பட்ட கவசங்கள் சுமார் 39 நாட்களுக்குப்பின் சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்
சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்

'விஜய் மல்லையா வழங்கிய தங்கத்தில் துவார பாலகர்கள் சிலைகளுக்கும் தங்கம் பூசப்பட்ட நிலையில், மீண்டும் தங்கம் பூசவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. 1999-ம் ஆண்டு செம்பு கவசங்கள் மீது பூசப்பட்ட தங்கம் 2019-ல் ஆவியாகி விட்டதா?' என்ற விமர்சனங்கள் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு எதிராக எழுப்பப்பட்டன.

இதையடுத்து சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவனம் தங்களிடம் செம்பு கவசங்கள்தான் வழங்கப்பட்டன எனவும், நாங்கள் தங்கம் பதித்து அனுப்பி வைத்தோம் எனவும் தெரிவித்துள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்த கிரைம் பிரான்ச் குழுவை நியமித்தது கேரள ஐகோர்ட். மேலும், தேவசம் விஜிலென்ஸ் அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.

சபரிமலை சன்னிதானம்
சபரிமலை சன்னிதானம்

விஜிலென்ஸ் விசாரணையில் 2019-ம் ஆண்டு சபரிமலை அட்மினிஸ்டிரேட்டிவ் ஆப்பீசராக இருந்த முராரி பாபு என்பவர் துவாரபாலகர் கவசங்களை அனுப்பி வைத்தது தெரியவந்தது. அவர் தற்போது திருவிதாங்கூர் தேவசம்போர்டு துணை கமிஷனராக உள்ளார்.

மேலும் அன்றைய திருவாபரணம் கமிஷனராக இருந்த பைஜூ, எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசராக இருந்த சுதீஷ் ஆகியோருக்கும் இதில் பங்கு இருப்பதாக தேவசம் விஜிலென்ஸ் கண்டுபிடித்துள்ளது. பைஜூ, சுதீஷ் ஆகியோர் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில் தங்க கவசங்களை செம்பு கவசங்கள் என மோசடியாக ரெஜிஸ்டரில் பதிவுசெய்த அதிகாரி முராரிபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கவசங்கள் மீது இருந்த தங்கம் என்ன ஆனது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல்போன விவகாரத்தில் முதன் முதறையாக அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குடும்பத்தினரின் இழப்புக்கு ஆறுதல் கூறியதுடன், விஜய் தனிப்பட்ட முறையில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி : 11-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். இவரது உறவினரான 16 வயதான சிறுவன் நாசரேத் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப... மேலும் பார்க்க

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்

நடிகை குறித்து அவதூறாகப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக... மேலும் பார்க்க

Bihar Election: நிதிஷ் தக்க வைப்பாரா? தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பாரா? பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

முடித்த காங்கிரஸ் ஆதிக்கம்.. தொடங்கிய லாலுவின் எழுச்சி!பீகார் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது முதல் 1990 வரை காங்கிரஸ் கட்சியே அந்த மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்த... மேலும் பார்க்க

வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த... மேலும் பார்க்க

பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம்

பாஜகவைச் சேர்ந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள்... பிராமண சமூகம் சமூக நலனுக்காகப் பாடுபட்டுள்ளது. எனவே, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ப... மேலும் பார்க்க