செய்திகள் :

தூத்துக்குடி : 11-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு - நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். இவரது உறவினரான 16 வயதான சிறுவன் நாசரேத் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏரல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சிவநேசன் என்பவர், காவலர் சீருடை இல்லாத நிலையில் காலையில் தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வரும் மாணவர்

அப்போது அதே வழியாக செந்தில் ஆறுமுகமும் வேகமாகச் சென்றாராம். இதைப் பார்த்த ஏட்டு சிவநேசன், ”பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் பாதையில் இப்படி வேகமாகச் செல்லலாமா?” எனச் சொல்லி கண்டித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ”என்னை எப்படி நீங்கள் திட்டலாம்?” எனச் சொல்லி செந்தில் ஆறுமுகம், சிவநேசனிடம் கேட்டுள்ளார். அப்போது, தான் ஏரல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருவதைக் கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டுச் சென்ற செந்தில் ஆறுமுகம், தன்னை சிவநேசன் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் மற்றும் செந்தில் ஆறுமுகத்தின் உறவினர்கள், சிவநேசனிடம் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில்,16 வயது மாணவரை ஏட்டு சிவநேசன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

அம்மாணவரின் வயிற்றில் கத்தி உடைந்து இருந்ததால் வலியால் கத்தியுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்து உடைந்த கத்தி துண்டை வெளியே எடுத்தனர். இதுதொடர்பாக ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவநேசனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவநேசன் கையில் வைத்திருந்த கீ செயின் கத்திதான் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் சிவநேசனை கைது செய்தனர்.

கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குடும்பத்தினரின் இழப்புக்கு ஆறுதல் கூறியதுடன், விஜய் தனிப்பட்ட முறையில்... மேலும் பார்க்க

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்

நடிகை குறித்து அவதூறாகப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக... மேலும் பார்க்க

சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கருவறை முன்புள்ள துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விலை மதிப்புமிக்க பொருட்களை கோய... மேலும் பார்க்க

Bihar Election: நிதிஷ் தக்க வைப்பாரா? தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பாரா? பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

முடித்த காங்கிரஸ் ஆதிக்கம்.. தொடங்கிய லாலுவின் எழுச்சி!பீகார் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது முதல் 1990 வரை காங்கிரஸ் கட்சியே அந்த மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்த... மேலும் பார்க்க

வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த... மேலும் பார்க்க

பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம்

பாஜகவைச் சேர்ந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள்... பிராமண சமூகம் சமூக நலனுக்காகப் பாடுபட்டுள்ளது. எனவே, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ப... மேலும் பார்க்க