செய்திகள் :

Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' - சூர்யகுமார் யாதவ் அப்டேட்

post image

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது.

விலா எலும்பில் ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிபட்டது. இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பிசிசிஐ மருத்துவர்கள் உட்பட பலரும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று (அக்.28) செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

Shreyas Iyer
Shreyas Iyer

" ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிந்த உடனேயே அவருக்கு செல்போனில் அழைத்தேன். ஆனால் அவரிடம் செல்போன் இல்லை.

பந்தை பிடிக்கப்போகும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஸ்ரேயஸ் ஐயரின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

அடிப்பட்ட போது எங்களின் பிசியோ கமலேஷ் ஜெய்ன், ஸ்ரேயாஸ் ஐயருடன் இருப்பது தெரிய வந்தது.

ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருப்பதாக அவர் கூறினார். அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.

கடந்த 2 நாட்களாகவே ஸ்ரேயஸ் ஐயருடன் பேசுகிறோம். அவரால் எங்களுக்கு பதில் அளிக்க முடிகிறது. செல்போனில் பேச முடிகிறது.

ஸ்ரேயஸ் ஐயருடன் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரேயஸ் இருக்க வேண்டும்.

Shreyas Iyer
Shreyas Iyer

அவர் அனைவருடனும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். எந்த பிரச்னையும் இல்லை.

ஸ்ரேயஸ் ஐயர் கேட்ச் பிடித்த போது சாதாரணமாகவே இருந்தார். வெளியில் இருந்து பார்க்கும் போது எதுவும் தெரியவில்லை.

அவர் ஓய்வறைக்கு வந்த பின்னரே, ஸ்ரேயஸ் ஐயருக்கு கூடுதல் சிகிச்சை தேவை என்பது தெரிய வந்தது.

பின்னர் மருத்துவரிடம் கொண்டு சென்ற போதும் ஸ்ரேயஸ் ஐயர் சாதாரணமாகவே பேசி இருக்கிறார்.

ஸ்ரேயஸ் ஐயர் கீழே விழுந்தப் போதே காயம் ஏற்பட்டிருக்கிறது ஆனால் அந்த சமயத்தில் எங்களுக்கு அது தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் சக வீரர் பகிர்வு

விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப... மேலும் பார்க்க

Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!

இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். உலகக் கோப்... மேலும் பார்க்க

`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!

2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை ... மேலும் பார்க்க

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி,... மேலும் பார்க்க

மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!

மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர... மேலும் பார்க்க