செய்திகள் :

Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' - சூர்யகுமார் யாதவ் அப்டேட்

post image

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது.

விலா எலும்பில் ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிபட்டது. இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பிசிசிஐ மருத்துவர்கள் உட்பட பலரும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று (அக்.28) செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

Shreyas Iyer
Shreyas Iyer

" ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிந்த உடனேயே அவருக்கு செல்போனில் அழைத்தேன். ஆனால் அவரிடம் செல்போன் இல்லை.

பந்தை பிடிக்கப்போகும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஸ்ரேயஸ் ஐயரின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

அடிப்பட்ட போது எங்களின் பிசியோ கமலேஷ் ஜெய்ன், ஸ்ரேயாஸ் ஐயருடன் இருப்பது தெரிய வந்தது.

ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருப்பதாக அவர் கூறினார். அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.

கடந்த 2 நாட்களாகவே ஸ்ரேயஸ் ஐயருடன் பேசுகிறோம். அவரால் எங்களுக்கு பதில் அளிக்க முடிகிறது. செல்போனில் பேச முடிகிறது.

ஸ்ரேயஸ் ஐயருடன் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரேயஸ் இருக்க வேண்டும்.

Shreyas Iyer
Shreyas Iyer

அவர் அனைவருடனும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். எந்த பிரச்னையும் இல்லை.

ஸ்ரேயஸ் ஐயர் கேட்ச் பிடித்த போது சாதாரணமாகவே இருந்தார். வெளியில் இருந்து பார்க்கும் போது எதுவும் தெரியவில்லை.

அவர் ஓய்வறைக்கு வந்த பின்னரே, ஸ்ரேயஸ் ஐயருக்கு கூடுதல் சிகிச்சை தேவை என்பது தெரிய வந்தது.

பின்னர் மருத்துவரிடம் கொண்டு சென்ற போதும் ஸ்ரேயஸ் ஐயர் சாதாரணமாகவே பேசி இருக்கிறார்.

ஸ்ரேயஸ் ஐயர் கீழே விழுந்தப் போதே காயம் ஏற்பட்டிருக்கிறது ஆனால் அந்த சமயத்தில் எங்களுக்கு அது தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பிரதிகா ராவல் காயம்; அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் - கம்பேக் தரும் ஷபாலி!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இரண்டாவது அரையிற... மேலும் பார்க்க

Karun Nair: "எனக்கு சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும்" - ரஞ்சியில் 174* விளாசிய கருண்!

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் ... மேலும் பார்க்க

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன.ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க

Shreyas Iyer: 'விலா எலும்பில் தசை கிழிவு' - ஸ்ரேயஸ் உடல்நிலை எப்படியிருக்கிறது? பிசிசிஐ அப்டேட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துணைக் ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! - என்ன நடந்தது?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது, இந்திய ஒருநாள் தொடர் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ்... மேலும் பார்க்க