செய்திகள் :

ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! - என்ன நடந்தது?

post image

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது, இந்திய ஒருநாள் தொடர் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரியை அவுட் செய்ய பின்னோக்கிப் ஓடி கேட்ச் பிடித்தார்.

அப்போது அவரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சனிக்கிழமை டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் சோர்வாக காணப்பட்டார்.

தொடர்ந்து BCCI மருத்துவக் குழு, விரைவாகச் செயல்பட்டு அவரின் விலாப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தது.

Shreyas Iyer
Shreyas Iyer

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விலா எலும்புக் கூண்டில் காயம் ஏற்பட்டதால், உள் இரத்தப்போக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சையளிக்கப்படுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ வெளியிட்டிருக்கும் செய்தியில், ``ஷ்ரேயாஸ் கடந்த இரண்டு நாட்களாக ஐசியுவில் இருக்கிறார். குணமடைவதைப் பொறுத்து அவர் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை கண்காணிப்பில் இருப்பார்.

இப்போது நிலைமை சீராக உள்ளது. தொடக்கத்தில் மூன்று வாரங்கள் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது குணமடையும் காலம் அதிகமாக இருக்கலாம்.

அதனால் அவர் எப்போது மீண்டும் மைதானத்துக்கு வருவார் எனத் தெரியவில்லை. " எனக் கூறப்பட்டிருக்கிறது.

"என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது"- இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரஹானே

இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர். குறிப்பாக, 2020- 2021... மேலும் பார்க்க

Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் அரையிறுதியில் மீதமிருக்கும் ஓர் இடத்துக்கு செல்லப்போவது நீயா இல்... மேலும் பார்க்க

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனையை சமன் செய்த பிரதிகா

நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் மிஞ்சியிருக்கும் ஒரு இடத்தைத் தங்களுக்கானதாக மாற்ற நியூசிலாந்தும் இந்தியாவும் இன்று (அக்டோபர் 23) மோதின.இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான இப... மேலும் பார்க்க

`வாடி ராசாத்தி!' - சதமடித்த ஸ்மிருதி மந்தனா; இன்னும் 2 சதங்களில் காத்திருக்கும் சாதனை

இந்தியா மற்றும் இலங்கை நடத்திவரும் நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்... மேலும் பார்க்க

AUS v IND: முடிவுக்கு வந்த இந்தியாவின் 17 வருட வெற்றிநடை; தொடரை வென்ற ஆஸ்திரேலியா

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.இந்த நிலையில், அடிலெய்டு மைதானத்தில் இர... மேலும் பார்க்க

``சர்ஃபராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை?; கவுதம் கம்பீர் நிலைப்பாடு என்ன?'' - காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மதச் சார்புடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். நேற்றையதினம் (அக்டோபர் 21) வெளியான இந்தியா... மேலும் பார்க்க