சினேகன் தந்தை மறைவு: "எனது தம்பியின் தந்தை மறைவு செய்தி கேட்டு துயருற்றேன்" - கம...
"என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது"- இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரஹானே
இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர்.
குறிப்பாக, 2020- 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை வல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.
ஆனால் சில வருடங்களாக இந்திய அணியில் ரஹானே புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரஹானே பேசியிருக்கிறார்.
" வயது என்பது எனக்கு வெறும் எண்ணிக்கை மட்டும் தான். களத்தில் எப்படி விளையாடுகின்றோம். நாம் எவ்வளவு உத்வேகத்துடன் இருக்கின்றோம் என்பதை பொறுத்துதான் அனைத்திலும் இருக்கின்றது.
களத்திற்குள்ளே கடினமாக உழைக்க வேண்டும். நான் ஆஸ்திரேலிய தொடரில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று நினைத்து இருந்தேன்.
தனிப்பட்ட முறையில் நான் அப்படித்தான் யோசித்து வந்தேன். ஆனால் என்னை அணியின் சேர்க்கவில்லை.
உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி தேர்வு குழுவினர் அதிகமாக பேசுகின்றனர்.
நானும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றேன்.டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன்.
பல ஆண்டுகளாக உழைத்து இருக்கின்றேன். என்னைப் போன்ற ஒரு அனுபவ வீரருக்கு நிச்சயம் கம்பேக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை தேர்வு குழுவினர் வழங்க வேண்டும்.

ஆனால் என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது. ரோஹித் சர்மா தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றிருக்கிறார்.
இதன் மூலம் வயது வெறும் நம்பர் மட்டும்தான் என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார். ரோஹித், கோலி போன்ற வீரர்கள் பல ஆட்டங்களை நமக்காக வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் தான் நான் சொல்கின்றேன். உங்களுக்கு அனுபவம் என்பது மிகவும் தேவை.
இளம் வீரர்களை மட்டுமே வைத்து நாம் விளையாடக் கூடாது" என தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.

















