செய்திகள் :

Sriram Sridharan: ஆஸி., அணிக்கு 6 வருடம் பயிற்சயளித்த ஸ்ரீராம் - உதவிப் பயிற்சியாளராக நியமித்த CSK

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு போட்டியுடன் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட்டிகளில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்த நிலையில், சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ் ஆகியோருடன் பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீராம் ஸ்ரீதரன் இணைந்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்தவரான ஸ்ரீராம் ஸ்ரீதரன் இடதுகை சுழற்பந்துவீச்சாளராகத் தனது கிரிக்கெட் கரியரைத் தொடங்கினார். 1992–93ல் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீராம், அந்தத் தொடரில் மொத்தம் 29 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கூடவே பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டராக உருவெடுத்த ஸ்ரீராம், 1999-2000 ரஞ்சி தொடரில் தமிழக அணியில் களமிறங்கி 5 சதங்கள் உட்பட 1075 ரன்கள் குவித்து அந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பி.சி.சி.ஐ விருது வென்றார். அதே ஆண்டில் இந்திய ஆடும் வாய்ப்பையும் பெற்றார்.

2000-ம் ஆண்டில் நாக்பூர் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கெதிராகத் தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஸ்ரீராம். அதே ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் தேர்வானார். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவில்லை. பின்னர், தனது 6 ஆட்டங்களிலேயே அணியிலிருந்து ஸ்ரீராம் கழற்றிவிடப்பட்டார். மீண்டும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால், 2004-05ல் பங்களாதேஷுக்கெதிரான தொடரில் ஸ்ரீராமுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்ரீராம், முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனாலும், அதன்பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ய்பு ஸ்ரீராமுக்கு வழங்கப்படவில்லை. அதோடு, அவரின் சர்வதேச கிரிக்கெட் கரியரும் முடிவுக்கு வந்தது.

ஸ்ரீராம் ஸ்ரீதரன்
ஸ்ரீராம் ஸ்ரீதரன்

ஸ்ரீராம் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் மொத்தம் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 ரன்கள் அடித்து, 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஐ.பி.எல்லில் 2010-ல் பெங்களூரு அணியில் ஒரு போட்டியும், 2011-ல் டெல்லி அணியில் ஒரு போட்டியிடும் விளையாடியிருக்கிறார். அதன்பின்னர், பயிற்சியாளராக உருவெடுத்த ஸ்ரீராம், 2015-ல் இந்தியா வந்த ஆஸ்திரேலியா `A' அணியின் பயிற்சியாளர் குழுவின் ஓர் அங்கமாக இருந்தார். பின்னர், அதே ஆண்டில் பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராச் செயல்பட்டார்.

2016-ல் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளராக உயர்ந்த ஸ்ரீராம், 2018-ல் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரிலும், 2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் இவர் உதவிப் பயிற்சியாளராகச் செயல்பட்ட காலத்தில்தான், தனது முதல் டி20 உலகக் கோப்பையை (2021) வென்ற ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக 2018-ல் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்ட சமயத்தில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது.

ஸ்ரீராம் ஸ்ரீதரன்
ஸ்ரீராம் ஸ்ரீதரன்

அந்த சமயத்தில், ஆஸ்திரேலிய அணியில் உதவிப் பயிற்சியாளராக உறுதுணையாக இருந்த ஸ்ரீராம், இன்றைக்கு ஆஸ்திரேலிய மீண்டும் வலுவான நிலைக்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்திருக்கிறார். 2022-ல், ஆஸ்திரேலிய உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஐ.பி.எல்லில் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார்.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகிய அந்த சமயத்தில் ஸ்ரீராம், ``உலகக் கோப்பைகள், ஆஷஸ் போட்டிகளில் பணியாற்றியது எனக்குச் சிறந்த அனுபவமாக இருந்தது. ஆறாண்டு காலம், ஆஸ்திரேலியாவின் உதவிப் பயிற்சியாளராக நம்ப முடியாத அளவுக்கு நுணுக்கங்களைப் பெற்றிருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆதரவிற்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்." என்று கூறியிருந்தார்.

ஸ்ரீராம் ஸ்ரீதரன்
ஸ்ரீராம் ஸ்ரீதரன்

2022-ல் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் பங்ளாதேஷ் அணியில் ஆலோசகராக ஸ்ரீராம் செயல்பட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த ஐ.பி.எல் சீசனில் லக்னோ அணியின் உதவிப் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இப்படி பயிற்சியாளராக நீண்ட அனுபவம் கொண்டிருக்கும் ஸ்ரீராமை சென்னை அணி நிர்வாகம் உதவிப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது நியமித்திருக்கிறது. சென்னை அணியில் இவரின் நியமனம் ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது சுழற்பந்து கூட்டணிக்கு நிச்சயம் பலமானதாக இருக்கும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கடைசி பந்தில் ரன்னில் அவுட்... தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் ப... மேலும் பார்க்க

``பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது..." - பாக். அணி குறித்து வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிக மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்திருக்கிறார்.2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கி... மேலும் பார்க்க

CT 2025: `இந்தியாவுக்கு மட்டும் ஒரே மைதானம்... பெரிய சாதகம்' - பேட் கம்மின்ஸ் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதுவுமே முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பி.சி.சி.ஐ... மேலும் பார்க்க

Virat Kohli : `Return Of the Dragon' சதமடித்த கோலி; திணறிப்போன பாகிஸ்தான் - உற்சாகமடைந்த ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார் கோலி. கடந்த சில மாதங்களாகவே சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடாத கோலி சரியாக முக்கியமான சமயத்தில் 'Fire' ஆன ... மேலும் பார்க்க

PAK v IND: `சிரஞ்சீவி, வெங்கட் பிரபு, புஷ்பா பட இயக்குநர்' - துபாயில் குவிந்த நட்சத்திரங்கள்

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நேரில் செல்ல முடியாதவர்கள் எப்படியாவது டிவிகளிலும், ஒடிடி தளங்களிலும் கண்டு க... மேலும் பார்க்க

PAK v IND: `ஸ்பின்னர்களை வைத்து பாகிஸ்தானை அடக்கிய இந்தியா' - இந்த ஸ்கோர் எளிய இலக்கா?

சாம்பியன்ஸ் டிராபியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்திய ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் பாகிஸ்தான் அணி 241 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. முதல் இன்ன... மேலும் பார்க்க